Sunday 8 July 2012

தவிர்க்கிறாய் எனை நீ


 


 


 

இரு மன பரிமாற்றம்தனில்

ஒரு மனம் பறிபோனதற்கு

தினம் தினம் வந்து போகும்

நினைவின் சாட்சியாய்

கண்ணீர் துளிகள்


 

உன்னை எனக்கு தந்த

அந்த நிமிடங்கள்,

உலகையே நான் வென்று விட்டதை

உணர்த்திய உன் அருகாமை,

யாருமே திட்டாத அளவு உன்னை

திட்டித் தீர்த்தநேரங்கள்,

உயிர் பிழிந்த உன் பிரிவு,

அத்தனையும் மூச்சிருக்கும்

வரை மறக்காதட.


 

மறைத்த உண்மைகளில்

மறித்த என் நிஜங்கள்

உணரவில்லை இன்னும் நீ

புரியவில்லை என் பந்தம்

மனம் விட்டு பேசிய காலங்கள் அன்று

மனதையே விட்டு விட்டு பேசும் தருணங்கள் இன்று

ரணமாய் கொள்ளும் வேதனையில் இன்று

துடிக்கிறேன் உள்ளம் நொந்து

தவிர்க்கிறாய் எனை நீ

தவிக்கிறேன் நான் ஏன் என்று ?????

No comments:

Post a Comment