Saturday 30 June 2012

தேவதை



கனவு கண்டுகொண்டிருந்தேன், பகலில்
விழி மட்டும் திறந்திருந்தது
மனத்திரையில் அவள்...

தேவதை வெள்ளை நிற ஆடையில் அல்லவா வரும்
ஆனால் என் தேவதை மட்டும்
சிவப்பு நிற சுடிதாரில் இருந்தது
வந்த தேவதையோ
கைநீட்டி எனை அழைத்துக்கொண்டு சென்றது
நானும் சென்றேன் கூடவே எதிர்ப்பின்றி

அழைத்து செல்வது தேவதை அல்லவா!

எங்கே சென்றோம்
ஏன் சென்றோம் தெரியவில்லை
தேவதையின் கரம் பற்றிக்கொண்டு
மிதந்தேன் வானில்

ஆஹா என்ன இன்பம்
இப்படியே இறந்துவிடலாமா? என யோசித்தேன்
அப்போது தான் புரிந்தது
நான் பாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பது

பின்னந்தலையில் நல்ல அடி
"வேலயப்பாரடா" மேலதிகாரி
பின்னாலிருந்து "கொள்" என சகபாடிகள் சிரிப்பு......................

என் செய்வேன்...?

சிரிப்பு......

ஆயுளுக்கும் தந்து விடு

வலிமை அதிகம்

நாடோடிய போல

கவிதை

காதல்

குறும்பி நீ ...!

அம்மா

வீண் வம்பு

உனக்கு அருவி பிடிக்கும்

எமன்

காதல் ஒருபோதும் முடிவதில்லை




என்றாவது ஒரு காதலி கிடைப்பாள
என்று பல வருடங்கள்
காத்திருந்த காலங்கள் உண்டு
விதவிதமாய் பெண்கள்
எனது வாழ்க்கை பக்கங்களை
நிரப்பி போய்இருக்கிறார்கள்
சிலர் தோழியாக வெகு
சிலர் தொல்லைகளாக
பலர் அழகால்
சிலர் அறிவால் மயக்கியதுண்டு
ஆனாலும் காதலி என்று
யாரும்இருந்ததில்லை அதுவரை ………
இனி காதலி என்றாலே
அவள் ஒருத்தி என்று நம்பியது
இறந்தகாலம் எவரும் காதலி ஆகலாம் என்பது
எதிர்காலமாக இருக்கலாம்
நிகழ்காலத்தில் வெறுமை
ஒவ்வொரு திருமணத்திலும்
எவர்எவரோ அவரவர் காதலன் காதலியை
இழக்கிறார்கள் வேறொருவரின் காதலன் காதலியை
அடைகிறார்கள் கணவன் மனைவி எனும் பெயரில்
எல்லா காதல்களும்
இரட்டை வாழ்க்கை வாழ்கிறது
மனதில் ஒன்று மடியில் ஒன்று என அல்லது
கைவிட்ட ஒருதலை காதலை எண்ணி
ஒரு காதல் ஒருபோதும் இல்லை
ஒவ்வொருபருவத்திலும் ஒருஒரு காதல்
விரும்பியோ விரும்பாமலோ
அரும்பிவிடுகிறது
இனி என் அடுத்த காதலுக்கு நிச்சியம்
காத்திருக்கலாம்
காதல் ஒருபோதும் முடிவதில்லை

தொலைபேசியில் நீ கொடுத்த முத்தம்

உதட்டு முத்தம்



வைகறை விடிந்தால் அச்சம் பிறக்கிறது
கனவில் வந்த நீ காணமல் போய்விடுகிறாய்
கனவில் மட்டும் வருகிறாய் நேரில் வருவதில்லை என்ற
குறை இருந்தாலும் இமை மூடினால்
காணமல் போய்விடுகிறது எப்போதும்

முத்தகரைகளை பத்திர படுத்தலாம் என்றால்
கனவு முத்தம்
உன்னை போலவே விழித்ததும் காணமல் போய்விடுகிறது

கருப்பு வெள்ளை கனவுகள் தான் வருமாம்
நீ வரும் கனவு மட்டும் எப்படி வண்ணத்தில் ?..
இரவு என்பதற்காக பஞ்சவர்ண கிளி கருப்பாய் இருக்காதே என்கிறாய
அதுவும் சரிதான்

பற்றாகுறை பட்ஜெட் போடும் அரசுகளை போலத்தான்
நீயும் உன் கனவுகளும்
பத்துவதே இல்லை

கனவில் நீ தரும் முத்தங்களை
எல்லாம் வரிபிடித்தம் செய்கிறது பகல்
நேரில் வரி விலக்கு போட்டுவிடு

கனவு முத்தம் பற்று
பகல் முத்தம் வரவு
உதட்டு முத்தம் லாபம்

எல்லா கனவுகளிலும் நீயே முத்தமிடுகிறாய்
நான் தர ஆயத்தமாகும் போது விடிந்து விடுகிறது
நீ மறைந்து விடுகிறாய்

என் கனவுக்குள் நீ முத்தமிடுவது போல
உன் கனவில் நான் முத்தமிடுகிறேனா ?..
எங்கே நீ வாங்க மட்டும் தான் செய்கிறாய் தருவதே இல்லை என்கிறாய ?..
என்ன செய்ய கொடுப்பதை விட பெறுவது தான் சுகம் காதலில்

கனவு முத்தம் சத்தாய் தருகிறாய்
பகல் முழுவதும் அலைந்து திரிந்த களைப்பு காணமல் போய்விட

எல்லா இரவுகளும் நான் கனவு காண தாயராகிறேன்
நீ முத்தம் கொடுக்க தயராகிறாய்
எல்லா கனவுகளிலும்

நீ ஒருத்திமட்டும் தான் ….ஆனால் எனக்கு
ஒவ்வொரு கனவிலும் ஒவ்வொருத்தி

தன்னம்பிக்கை

தாஜ்மகால்



தாமரை

காதல் என்னும் ரோஜா...

முன் பனியென கோபத்தை
உன் அழகான முனி மூக்கில் வைத்திருக்கிறாய்...
ஒன்றை மட்டும் நினைவில் கொள் ....
காதல் என்னும் ரோஜா
அதிகாலை பனியில்தான்
இன்னும் அழகு ...
நீ கோபம் கொண்டு மறைத்தாலும்...
உன் அழகான விழிகளுக்கு..
காதலை மறைக்க தெரியாது...

முதல் முத்தம்

சுகம்

கல்லறை பூக்கள்

முத்தம்

பறித்து சென்றவள்

முத்தங்கள்

உன் முத்தங்கள்



Quantcast
 
உன் சின்ன சின்ன கோபங்களின்
உடைந்து போகிறது எனது இதயம்
பின் உன் முத்தங்கள் ஒட்டவைக்க……..

உன்னை பார்க்கவேண்டும் எனும்போதெல்லாம்
விரலில் ஊசியால் குத்திகொள்வேன்
சட்டென எட்டி பார்த்து விடுவாய் வெட்கத்தால் சிவந்து
எனது உதிரமே நீதானே……

நான் உனக்கு முத்தமிடும் போதும்
நீ எனக்கு முத்தமிடும் போதும்
காற்றின் மாசு குறைகிறதாம்
நம் முத்த சத்தத்தால் ….
முத்தத்தால் இதுவும் ஒரு பயன் பார்த்தாயா

அணைக்காமல் முத்தம் கொடுகிறானே என்ற தவிப்பு உனக்கு …
உன் ஆடை கசங்கி விடுமோ தயக்கமேனக்கு
எப்படி தெரியும் என்று பார்கிறாய கொடியில் காய்ந்த உன் ஆடைகள் தான் கூறியது ……

உன் காதலியை எனக்கு காட்டவே மாட்டாயா
என்று என் வீட்டு ஆளுயர நிலைக்கண்ணாடி கேட்டுகொண்டே இருக்கிறது ….
முடியாது என்று சொல்லி விட்டேன்
நான் முத்தமிடும் போதெல்லாம் வெட்க படுவாய்
அது நம் முத்தத்தையும் உன் வெட்கத்தையும் நம் முத்தத்தை பார்க்கும் பின்
நீ யாரோ பார்க்கிறார்கள் என்று விலகி விடுவாயோ


எனக்கு குளிரெடுக்கும்
உனக்கு வேர்க்கும் நாம் முத்தமிட்டுக்கொண்டே
அனைத்து கொள்ளும்போதெல்லாம் ….. இது தான் சவ்வூடு பரலாகஇருக்குமோ

உன் உதடுகளை கவ்வி பிடிக்கும் போதெலாம்
என்னை மூச்சுமுட்ட கட்டிபிடிப்பாய் …. இது நீயுட்டனின் மூன்றாம் விதி

பொதுவாக முத்தங்கள் யாருக்கு எப்படியோ ….
எனக்கு உன் முத்தங்கள் தான் பிராணவாயு
இருந்தும் குறைவாகத்தான் கிடைக்கிறது

கத்தி கையில் வைத்திருந்தால்



 கத்தி கையில் வைத்திருந்தால்
ஒரு கை பார்த்து விடுவேன்
நீ கண்ணில் அல்லவா வைத்திருக்கிறாய்

காதலை சொல்லவரும்போதேல்லாம்
உன் கண்ணின் கூர்மையால்
என் இதயத்தை காயமுறசெய்கிறாய்

கத்திக்கு உறை இருப்பதுபோல்
உன் கண்களுக்கு
கண் மை

ஈட்டி எறிவது
ஒருவகை விளையாட்டு
நீ கண்ணால் எறிகிறாயே
அது எந்த வகை ?..

நுழைய அனுமதியில்லாத பகுதிகளுக்கு
பாதுகாப்பு பலமாய் இருக்கும்
உன் இதயமுமா அனுமதி மறுக்கப்பட்ட இடம்
கண்கள் கத்தி வைத்து
காவல் காக்கிறதே

ஏழு மலை
ஏழு கடல் தாண்டி அசுரனின் உயிர்
பாதுகாப்பாய் இருக்குமாம்
என் காதலுக்கு உன் இதயம் தான் சரி
உன் கண்களை தாண்டி
என் காதலை யாரென்ன செய்துவிட முடியும் ?..

என் காதலை
கனவிலாவது பத்திரபடுத்திகொள்
உன் கண்களை தாண்டி வர அப்போதாவது
முடிகிறதா என்று பார்க்கலாம்

புல்லாங்குழல் இசையாய் வழிகிறேன்

மைப்போட்டு பார்க்கலாம்

கப்பல்விடக் காத்திருக்கிறது

நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு

பைத்தியமாகிவிட்டது