Sunday 11 November 2012

ஜோதிட பழமொழிகள்

  • பத்தில் குரு பதவிக்கு இடர்
  • இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே
  • பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்
  • நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை
  • சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது.
  • வைத்தியன் கையை பிடிப்பான் ஜோதிடன் காலை பிடிப்பான்
  • கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்
  • ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க
  • குரு பார்க்க கோடி நன்மை
  • கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்
  • மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்
  • பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது,
  • மேஷ ராகு மேன்மையை கொடுக்கும்
  • துலா கேது தொல்லை தீர்க்கும்
  • சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்
  • சுவாதி சுக்ரன் ஓயா மழை
  • மறைந்த புதன் நிறைந்த கல்வி
  • சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்
  • சித்திரை அப்பன் தெருவிலே
  • பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்
  • விதி போகும் வழியே மதி போகும்.
  • அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்
  • குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?
  • சனி பார்த்த இடம் பாழ்
  • சனி நீராடு
  • விழுப்பு இருக்குமிடத்தில் வேப்பிலைக்காரி தங்க மாட்டாள்.
  • ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு
  • பருப்புக்கு போகாவிட்டாலும் நெருப்புக்கு போக வேண்டும்
  • எட்டில் சனி நீண்ட ஆயுள்
  • சனிபகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை
  • அகப்பட்டவனுக்கு அஷ்டத்தில் சனி
  • குரு நின்ற இடம் பாழ்
  • சனி பார்க்கும் இடம் பாழ்