Monday 30 July 2012

ஒரு யுவதியின் கடிதம்...



அழகான ஆடை
அம்சமான அழகு
ஆராதிக்கப்பட வேண்டும் பிறரால்!

ஆனால்
என்ன நடக்கிறது?

சுதந்திரத் துள்ளலில்
வெளியில் சென்றால்
எத்தனை "பார்வைகள்" - அந்த
பார்வைகளுக்குள் எத்தனை "ஏக்கங்கள்"?

இழுத்துப் போர்த்திச் சென்றால்
அங்கேயும்
அலைபாயும் காமக் கண்கள்...
எங்கே விலகி இருக்கிறது என்ற
அர்ப்பத் தேடல்கள்...

மார்டன் ஆடையில் வந்தால்
ஆடை ஒவ்வொன்றையும்
அப்பட்டமாய் உரிக்கும் பார்வைகள்...

ஷாப்பிங் சென்றால்
விம்மும் அழகை
குறி வைத்து இடிக்கும்
இடி மன்னன்கள்!

பஸ்ஸில் பயணப்பட்டால்
இன்னும் தொல்லை...

உச்சி முதல்
உள்ளங்கால் வரை பார்த்து
காம தாகம் தணிக்கும்
போதை கண்களால்
பேதைகள் நாங்கள்
பெண்ணாய் பிறந்ததற்காய் வருந்துகிறோம்...

ஓட்டலில்
குனிந்து சாப்பிட்டாலும்
தெரியாமல்
உள்ளாடை வெளியில் தெரிந்தாலும்
ஒதுங்கிப்போன துப்பட்டாவை
சரி செய்தாலும்
அங்கேயும் எங்களை
போகிக்கும் பார்வைகள்...

எங்களுக்கு
எப்போது வரும் சுதந்திரம்?
அதற்காக
துணை வருவார்களா,
பிற பெண்ணையெல்லாம்
தாயாய் - சகோதரியாய்
பாவிக்கும் ஆண்கள்...?

- இப்படிக்கு
ஒரு சென்னை யுவதி

No comments:

Post a Comment