Monday 30 July 2012

தோழியான காதலி



கவிதை எழுத
காத்திருந்த நேரத்தில்
கவிதை வடிவாய் - என்
கற்பனையில் உதித்தவள்
நீ தான்!

வாழ்வின் அர்த்தங்களுக்கு
விடை தெரியாமல்
விழித்தபோது - அதை
விளங்க வைத்தவளும்
நீ தான்!

ஏன்...
என் வாழ்வே
திசைமாறியபோது
வழிகாட்டியானவளும்
நீயே தான்!

அன்று -
உன் காந்த விழிப் பார்வையில்
நின் வசமான நான்
இன்று
நீ காட்டிய பாசத்திலே
கட்டுண்டு விட்டேன்...

காதலிக்க - உனை
உயிராய் நேசித்தவனுக்கு
காதலிக்கவே
கற்றுக்கொடுத்தாய் அன்பை;
ஒரு தோழியாக...

என் மீது படர்ந்த
உன் பாசத்திற்கு - ஓர்
விளக்க வுரையையே
அறிந்துவிட்டேன்
நின் நன்னடத்தையில்...

காதலியை
கற்பனையில் உன்னுள் செதுக்கி
அவளை விடவும்
நின் அன்பையே
நான் ஏற்றுவிட்டேன்
இப்போது!

இதுபோதும் எனக்கு;
நாம் சந்தித்த நிகழ்வுகள்
வசந்த நாட்களாகும்
என் வாழ்வில்
இனி வரும் நாட்களில்...

ஆனாலும்
என் இதயத்தில்
எங்கோ வலிக்கிறது
நாளும் உனை நினைத்து...

No comments:

Post a Comment