Monday 30 July 2012

விடுதலை கொடு அன்பே...



எனக்கு
ரொம்ப பிடிக்கும்
அன்றலர்ந்த தாமரையாய்
உந்தன் முகத்தில் பிரகாசிக்கும்
அந்த
வெள்ளி நீர்வீழ்ச்சிச் சிரிப்புகள்...

அதை காண
கண்கள் கோடி வேண்டும்...
வரம் அருள மாட்டாரா
அந்த பிரம்மன்?
எத்தனிக்கும்
எந்தன் ஆவல்களுக்கு
ஆறுதல் தேடுகிறேன் பல நேரம்!

உந்தன்
பொற்பாதத்தில் சிணுங்கும்
கொலுசொலியின் கீதத்தில்
என்னை எனக்குள்ளேயே
நானே தொலைத்த நாட்கள்
அனுதினமும் மலராதா?

மெல்லிய உரையாடலில்
ஏகத்துக்கும் எனை தழுவிய
உந்தன் ஞாபகங்களின் தாலாட்டில்
எந்தன் வாழ்க்கைக்கு - ஓர்
அர்த்தம் பெறுகிறேன்...

உந்தன்
சின்ன விரல்களின்
இனிய தீண்டலில்
முன்னுரையுடன் பயணமாகும்
எந்தன் கனவுகளுக்கு
உயிர் கொடுக்க மாட்டாயா?

நான் - நான்தானா?
என்னுள் பலபரீட்சை
செய்வித்த நீ - உந்தன்
அழியா நினைவுகளுடன்
எந்தன் வாழ்வில்
அணைபோட மாட்டாயா?

உந்தன் விழி வலையில் சிக்கி
தூக்கத்தை தொலைத்த
எந்தன் கண்களுக்கு
விடுதலை கொடுத்துவிடு;
அப்படியே
என்னையும்
உனதாய் ஏற்றுவிடு...!

No comments:

Post a Comment