Tuesday 31 July 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 22


சோதியென்ற குருபதியும் வெள்ளிநீலன்
சொலிக்கின்ற கதிர்மதிசேய் கணக்கன்பாம்பு
ஆதியென்ற ராசிபனி ரெண்டுக்குள்ளே
அடக்கிவைத்தார் கோள்களையும் ஆயன்தானும்
வாதியென் ஞானியும் பலவாறாக
வையகத்தில் பூட்டிவைத்தார் வரிசையாக
சாதகமாய் சென்மனுக்கு சுட்டிக்காட்டி
சமர்த்தாகப் பலன் சொல்லும் குறியைக்கேளே.


சோதிவடிவான குருவும், சுக்கிரன்,நீலனும் சனியும் ஒளி வீசுகின்ற சூரியனும்,சந்திரனும், செவ்வாய்க் கிரகமும், இன்னும் புதபகவானும் பாம்பிரண்டும் ஆகிய இந்த நவகோள்களையும் ராசிமண்டலமான பன்னிரு ராசிகளுக்குள்ளே அடக்கி வைத்தார் பேரொளிப்பிழம்பான இறைவன்.இது குறித்து வாதிட்டுக் கணித்த ஞானியர் பூவுலகில் வரிசைப்படுத்தி கூறிவைத்துள்ளார்கள். எனவே [ஒருவன் தன் ஜென்மஜாதகம் குறித்துக் கேட்க வருவானேல்] அவனுக்குச் சாதகத்தைக் கூறும் சமர்த்தான முறையினைக் கூறுகிறேன். எனது குறிப்பினை நன்கு உணர்ந்து கூறும் வகையைக் கேட்பாய்.

No comments:

Post a Comment