Tuesday 31 July 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 18 - ஒன்பதாம் பாவம்



ஒன்பதாம்பல னாகுமுபதேச
மின்பகூப மிகும் பணிகூபமும்
வன்வதான பரியும் வளப்பமும்
தன்மதானந் தனங்களுஞ்சாற்றுவர்


ஒன்பதாம் பாவகத்தால் ஏற்படும் பலன்களாவன: ஞானோபதேசம் பெறுதலும் இன்பம் வாய்த்தலும் நீர் வளப்பெருக்கும் ஆடையாபரணச் சேர்க்கையும் இன்னும், வாகனம், பரி முதலானவையும், மிகுந்த தனலாபம் தன்னலம் கருதாத தானதர்மங்கள் வாய்த்தலும் வெகு தனம் வாய்த்தலும் நேரும். [எ-று]

இப்பாடலில் ஒன்பதாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment