Tuesday 31 July 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 13 - மூன்றாம் பாவம்


ஆனமூன்றா மிடத்தினரும்பலன்
மானவீரியம் மற்றுயர்சேர்க்கையும்
தானயோகந் தயிரியஞ்சோதரர்
ஈனவேலை இருங்கலன் வீரமே.


மூன்றாம் இடத்தின் பலன்களாவன; மானவீரம், உயர்ந்தவர்கள் நட்புக்கொள்ளுதல், தானத்தில் ஈடுபாடு மேலானதாகக் கொள்ளும் யோகமும், வீரமும் வேகமும் கொண்ட சோதரர் ஸ்தானம் என்றும், ஈனவேலையில் வீறுடனும் வீரத்துடன் செயல்படுதலும் ஆன பலன்களைக் கூறலாம். (எ-று)

இப்பாடலில் மூன்றாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment