Monday 30 July 2012

சனீஸ்வரர் மந்திரங்கள்!


கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்களைக் கூறுவதன் மூலம் சனிபகவானின் பரிபூரண அருளைப் பெறலாம்.
சனீஸ்வர காயத்ரி
ஓம் சனைச்சராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தந்நோ: மந்தப்ரசோதயாத்
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்
ஸ்லோகம்
நீலாம்பரோ, நீலவபு: கிரீடி
க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான்
சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன:
பொருள் : மிகவும் சாந்தமானவரும், வரத்தை அளிப்பவருமான சனி பகவானைத் தியானம் செய்தால் ஆயுள் விருத்தி, விவசாயத்தில் மேன்மை, எருமை விருத்தி, இரும்புத் தொழில்கள், செங்கல் காளாவாயினால் லாபம் ஏற்பட, உத்தியோகம் செய்யும் இடத்தில் மனநிம்மதி ஏற்பட வேலைக்காரர்களால் நன்மை பெற, எலும்பு, பற்கள், கணை சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்க, சளி, நெஞ்சுக் கட்டு, வாத நோய்கள் தடுக்க, சட்டபூர்வமான தண்டனை, சிறைவாசம், கட்டுப்படுதல், சில சமயங்களில் விபத்துக்கள், மனோதைரியம் இழந்து தடுமாறுதல், சித்தப்பிரமை, மேகநீர் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க போன்றவை நெருங்காமல் தடைபடும்.
சனி ஸ்தோத்திரம்
ஸூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ: ஸிவப்ரிய:
தீர்க்கசார: ப்ரஸந்நாத்மா பீடாம்ஹரதுமே ஸனி:
சூர்யபுத்திரனும், நீண்டதேஹமுள்ளவனும், சிவப்ரியனும் தெளிந்த மனம் உள்ளவனுமான சனீஸ்வரபகவான் என்னுடைய தோஷத்தை போக்க வேண்டும்.
சனி வழிபாடு
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம யமாக்ரஜம்
சாயா மார் தாண்டஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்
சனீஸ்வர ஸ்தோத்ரம்
ஸன்னோதேவீசரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே
ஸம்யோ ரபிஸ்ர வந்துந:
அதிதேவதா மந்த்ரம்:
இமம்யமப்ரஸ்தரமாஹி ஸீதாங்கிரோபி: பித்ருபி: ஸம்விதான:
ஆத்வா மந்த்ரா கவிஸஸ்தா வஹன்த்வே நா ராஜன்ஹ விஷாமாதயஸ்வ:
ப்ரத்யதி தேவதா மந்த்ரம்:
ப்ரஜாபதே நத்வதேதான்யன்யோ விஸ்வா ஜாதானி பரிதாபபூவ
யத்காமாஸ்தே ஜுஹுமஸ் தன்னோ அஸ்து வயங்ஸ்யாம-பதயோ ரயீணாம்
அதிதேவதா ப்ரத்யதி தேவதா ஸமேத பகவதே சனைஸ்ச்சராய நம:
சந்தோஷம் தரும் சனைச்சர ஸ்தோத்ரம்
கோணேந்தகோ ரௌத்ரயமோத பப்ரு:
க்ருஷ்ண: ஸநி: பிங்களமந்தஸெளரி:
நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்
தஸ்மை நம: ஸ்ரீரவிநந்தனாய
பொருள்: கோணன்-முடிவைச் செய்பவன்; ரௌத்ரன், இந்திரியங்களை -அடக்குபவன். மேலும் பப்ரு, கிருஷ்ணன், சனி, பிங்களன், மந்தன், சூரிய புத்திரன் ஆகிய பெயர்களைக் கொண்ட சனைச்சரன் தினமும் நம்மால் தியானிக்கப்படுபவனாகி, சகல பீடைகளையும் போக்குகிறான். அத்தகைய சூரிய புத்திரனான சனைச்சரனுக்கு நமஸ்காரம்.
தசரதர் கண்டு சொன்ன சனைச்சர ஸ்தோத்ரத்தின் ஒரு ஸ்லோகம் இது. தினமும் பயபக்தியுடன் இந்த ஸ்லோகத்தைப் படித்து, சனி பகவானை தியானித்து வழிபட, நற்பலன்கள் கைகூடும்.
சனி கோசார ரீதியால் பன்னிரண்டு, எட்டு முதலிய ஸ்தானங்களில் இருப்பதாலும், ஜாதகத்தில் தோஷத்துடன் கூடியிருப்பதாலும், சனி தசாபுக்திகளிலும் ஏற்படும் கஷ்டங்கள் விலகுவதுடன், சர்வ சம்பத்துகளும் உண்டாகும்.

சனீஸ்வர தியான ஸ்லோகம் (வேறு வகை)
1. நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்
2. சதுர்புஜம் சனிம் தேவம் சாப தூணீக்ரு பாணகை
சஹிதம் வரதம் பீமதம்ஷ்ட்ரம் நீலோத் பலாக்ருதிம்
3. நீல மால்யானுலேபம் ச நீலரத்னைரலங் கிருதம்
ஜ்வாலோர்தவ முகுடாபாசம் நீலக்ருத்ர ரதாந்விதம்
4. மேரும் ப்ரதக்ஷிணம் யாந்தம் சர்வ லோக பயாவம்கம்
க்ருஷ்ணாம்பரதரம் தேவம் த்விபுஜம் க்ருத்ர சம்ஸ்திதம்
சர்வ பீடாஹரம் ந்ரூணாம் த்யாயேத் க்ரஹ கணோத்தமம்
5. சாபாசனோ க்ருத்ர ரதோதி நீல: ப்ரத்யங்முக: காச்யப கோத்ர ஜாத:
ஸசூலசா பேஷுகதாத ரோவ்யாத் சௌராஷ்ட்ர தேச ப்ரபவச்ச ஸெளரி
6. ஸனைச்சராய ஸாந்தாய சர்வாபீஷ்ட பிரதாயினே
நம: சர்வாத்மனே துப்யம் நமோ நீலாம்பராயச
7. த்வாதசாஷ்ட மஜன் மர்ஷே த்வீதிய ஸ்தான் ஏவச
த்வத் சஞ்சா ரோத்பவா தோஷா: ஸர்வே நச்யந்துமே ப்ரபோ
முனிவர்கள் தேவர் ஏனைய மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வு உன் மகிமை அல்லால் வேறுண்டோ?
கனிவுள தெய்வம் நீயே: கதிர் சேயே! காகம் ஏறும்
சனியனே! உனைத் துதித்தேன்; தமியனேற்கு அருள் செய்வாயே!

சனிபகவான் ஸ்தோத்திரம்
காப்பு - வெண்பா
தேவரெண்டிசைக்கதிபர் சித்தரொடு கிம்புருடர்
மூவர் முனிவர் முதலோரை - மேவியுறுந்
தாரணிந்த மார்பன் சனிபகவான் கதை புகலக்
காரணிந்த யானைமுகன்-காப்பு
1. ஆதிவே தாந்த முதலறிய ஞான
மைந்தெழுத்தினுட் பொருளையயன் மாலோடு
சோதி சிற்றம்பலத்தி லாடிகின்ற
சுடரொளியை நீ பிடித்த தோஷத்தாலே
பாதிமதி சடைக்கணிய வரவம்பூணப்
பதியிழக்கச் சுடலைதனிற் பாடியாடச்
சாதியில்லா வேடனெச் சிற்றின்ன வைத்த
சனியனே காகமேறுந் தம்பிரானே
2. வேலவனை வேங்கை மரமாக்கி வைத்தாய்
விறகுகட்டிச் சொக்கர் தமை விற்க வைத்தாய்
மாலினியை யுரலொடு கட்டுவித்தாய்
வள்ளிதனைக்குறவரது வனத்தில் வைத்தாய்
காலனை மார்க்கண்டனுக்காவரனுதைத்த
காரணமும் நீபிடித்த கருமத்தாலே
சாலவுனையான் றொழுதே னெனைத்தொடதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
3. மஞ்சுத வழயோத்தியில் வாழ்தசரதன் தன்
மக்களையும் வனவாசமாக்கி வைத்தாய்
பஞ்சவர்கள் சூதினால் பதியிழந்து
பஞ்சுபடும் பாடவர் படச்செய்வித்தாய்
எஞ்சலிலா வரிச்சந்திரன் பெண்டைவிற்றே
யிழிகுலத்திலடி மையுற விசையவைத்தாய்
தஞ்சமெனவுனைப் பணிந்தேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
4. அண்டமாயிரத்தெட்டு மரசுசெய்த
வடல்சூரபத்மனையு மடக்கிவைத்தாய்
மண்டலத்தையாண்ட நளச்சக்கரவர்த்தி
மனைவியோடு வனமதனி லலையச்செய்தாய்
விண்டலத்தை பானுகோபன்றன்னாலே
வெந்தணலாய்ச் சூரரை வெருவச்செய்தாய்
தெண்டனிட்டே னெந்நாளு மெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
5. அண்டர்கோன்மேனியிற் கண்ணாக்கி வைத்தாய்
அயன்சிரத்தை வயிரவனாலறுக்க வைத்தாய்
திண்டிறல்கொள் கௌதமனால கலிகைதான்
சிலையாகவேசாப முறவேசெய்தாய்
கண்டரள நகையிரதி மாரன் றன்றைச்
சங்கரனார் நுதல்விழியிற் றணல்செய்வித்தாய்
சண்டமிலா துனைத் தொழுதேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
6. பாருலவுபரிதியைப் பல்லுதிரவைத்தாய்
பஞ்சவருக்குத்தூது பீதாம்பரனை வைத்தாய்
தாருலவுவாலி சுக்ரீவன் தம்மைத்
தாரையினாற்றீராத சமர்செய்வித்தாய்
சூரனெ னுமிலங்கை ராவணன்றங்கை
சூர்ப்பனகி மூக்குமுலை துணிசெய்வித்தாய்
தாரணியு மணிமார்பா வெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
7. சுக்ரன்றன் கண்ணிழந்தான் இலங்கையாண்டு
துலங்குமி ராவணன் சிரங்கண்டிக்க வீழ்ந்தான்
மிக்கபுகழிரணியன்றன் வீறழிந்தான்
விளங்குதிரிபுராதிகளும் வெந்துமாண்டார்
சக்கரத்தாலுடலறுத்தான் சலந்திரன்றான்
தாருகாசுரனுமே சமரில் மாண்டான்
தக்கன் மிகச் சிரமிழந்தா னின்றோஷத்தாற்
சனியனே காகமேறுந் தம்பிரானே
8. அந்தமுள ஐங்கரன் கொம்பரவே செய்தாய்
அறுமுனிவர் மனைவிகள் கற்பழியச் செய்தாய்
சந்திரன் தன் கலையழிந்து தழைக்கச் செய்தாய்
சங்கரனைப் பிச்சை தானெடுக்கச் செய்தாய்
தந்திமுகச் சூரனுயிர் தளரச்செய்தாய்
சாரங்கதரன் கரத்தைத் தறிக்கச் செய்தாய்
சந்ததமுமுனைப் பணிவேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
9. சீதைதனையிரா வணனாற் சிறைசெய்வித்தாய்
தேவர்களைச்சூரனாற் சிறைசெய்வித்தாய்
மாதுதுரோபதை துயிலை வாங்குவித்தாய்
மகேச்சுரனையுமைபிரியும் வகைசெய்வித்தாய்
போதிலயன் றாளிற்றளை பூட்டுவித்தாய்
பொதிகையினிலகத்தியனைப் பொருந்தச் செய்தாய்
தாதுசேர்மலர்மார்பா வெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
10. அப்பர் தமைக்கருங்கல்லோ டலையிற்சேர்த்தாய்
அரனடியில் முயல்களை யடங்கச்செய்தாய்
செப்புமாணிக்கர் தமைச் சிறையிலிட்டாய்
ஸ்ரீராமனைமச்சவுரு வெடுக்கச் செய்தாய்
ஓப்பிலனுமான் வாலிலொளி தீயிட்டாய்
ஒலிகடலினஞ்சையர னுண்ணவைத்தாய்
தப்பிலா துனைத்தொழுதேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
11. நீரினையுண்டேழுமேக வண்ணா போற்றி
நெடுந்தபத்திலறு கமலக்கண்ணா போற்றி
சூரியன் தவத்தில் வந்த பாலா போற்றி
துலங்கு நவக்கிரகத்துண் மேலா போற்றி
காரியன் பெயர்களுப காரா போற்றி
காசினியிற் கீர்த்திபெற்ற தீரா போற்றி
மூரிகொளு நோய்மகவாமுடவா போற்றி
மூதுமகனின் முண்டகத்தாள் போற்றி போற்றி

சனீஸ்வர கவசம்
நெருங்கிடு பிணி யெலாம்
நீக்கு நோன்மையும்
ஒருங்கு மொய்ம்பு இரண்டும்
ஆங்குறும் கருந்துகில்
மருங்குலும் கழுகிவர்
வனப்பும் கொண்டு அமர்
அருங்கதிர் மதலை தாள்
அன்போடு ஏத்துவாம்!
(வேறு)
மறுவறும் எனது சென்னி
வளர்புகழ்ச் சனி புரக்க
பெறுமுகம் அன்பர் அன்பன்
பேணுக செவி கறுக்கும்
அறுவை நன்கு அணிவோன் காக்க
அச்சமே விளைக்கு மெய்யோன்
நறுமலர் விழி புரக்க
நாசி கை காரி காக்க.
கருங்களம் உடைய தேவன்
கவின்படு கண்டம் காக்க
பெருங்கடின் படுபு யத்தோன்
பெருவரைப் புயம் புரக்க
வருங்கை நீலோற் பலம்போல்
வளர்ஒளி அண்ணல் காக்க
ஒருங்குறும் எனது நெஞ்சம்
உடல் கரியவன் புரக்க.
சுந்தரம் தழுவும் உந்தி
சுட்கமாம் வயிற்றோன் காக்க
சந்தமார் விகடன் செய்வோன்
தடம்படு கடி புரக்க
நந்திய கோர ரூபன்
நற்றொடை புரக்க நாளும்
முந்துறு நெடிய ரூபன்
மொழிதரு முழுந்தாள் காக்க.
மங்கலம் ஈயும் ஈசன்
வனப்புறு கணைக்கால் காக்க
தங்குறு பரடு இரண்டும்
தகு குணாகரன் புரக்க
பங்கெனப் படுவோன் பாதம்
பழுதறப் புரக்க பார்மேல்
செங்கதிர் அளிக்கு மைந்தன்
திருந்திமென் அங்கங் காக்க.
நன்றிதரு சனிகவச நாள்தோறும்
அன்பினொடு நவின்று போற்றில்
வெற்றிதரும் விறல்உதவும் புகழ் அளிக்கும்
பெருவாழ்வு மேவ நல்கும்
கன்றுபவத் துயர்ஒழிக்கும் வினை ஒழிக்கும்
பிணி ஒழிக்கும் கவலை போக்கும்
அன்றியும் உள் நினைந்தவெலாம் அங்கை நெல்லி
யம்கனியாம் அவனி யோர்க்கே.
அருஞ்சுவணம் முதலவற்றின் அமைக்கும்
இயந்திரம் எள்ளுள் அமரவைத்து
வருஞ்சுகந்த மலராதிக்கு அரியவற்றால்
பூசித்து மனுப்பு கன்று
பெருஞ்சுகம் கொண்டிட விழைவோன்
கருந்துகிலோடு அந்தணர்க்குப் பெட்பின்ஈயில்
கருஞ்சனி உள் மகிழ்ந்துறு நோய்
களைந்துநல முழுதும்உளங் கனிந்தே நல்கும்.
ஆங்கதனோடு அரும்பொருளும் மற்றவனுக்கு
அளிப்பன் எனில் அவனுக்கு என்றும்
தீங்குஅகல மேன்மேலும் பெருகி எழு
வாழ்நாளும் செல்வப் பேறும்
ஓங்குமனை மக்கள்முதல் பற்பலசுற்
றப்பொலிவும் உதவும் காண்பீர்
வாங்குகடன் முளைத்திருள்நீத் தெழும்
கதிரேசன் அன்று உதவ வந்த மைந்தன்!

சனீஸ்வரன் அஷ்டோத்திரம்
ஓம் சநைச்சராய நம
ஓம் சாந்தாய நம
ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயிநே நம
ஓம் சரண்யாய நம
ஓம் வரேண்யாய நம
ஓம் ஸர்வேசாய நம
ஓம் ஸெளம்யாய நம
ஓம் ஸுரவந்த்யாய நம
ஓம் ஸுரலோக விஹாரிணே நம
ஓம் ஸுகாஸ நோப விஷ்டாய நம
ஓம் ஸுந்தராய நம
ஓம் கநாய நம
ஓம் கநரூபாய நம
ஓம் கநாபரண தாரிணே நம
ஓம் கநஸார விலேபாய நம
ஓம் கத்யோதாய நம
ஓம் மந்தாய நம
ஓம் மந்த சேஷ்டாய நம
ஓம் மஹ நீய குணாத்மநே நம
ஓம் மர்த்ய பாவந பாதாய நம
ஓம் மஹேசாய நம
ஓம் சாயா புத்ராய நம
ஓம் சர்வாய நம
ஓம் சத தூணிர தாரிணே நம
ஓம் சரஸ்த்திர ஸ்வபாவாய நம
ஓம் அசஞ்சலாய நம
ஓம் நீலவர்ணாய நம
ஓம் நித்யாய நம
ஓம் நீலாஞ்ஜந நிபாய நம
ஓம் நீலாம்பர விபூஷாய நம
ஓம் நிச்சலாய நம
ஓம் வேத்யாய நம
ஓம் விதிரூபாய நம
ஓம் விரோதா தார பூமயே நம
ஓம் பேதாஸ்பத ஸ்வபாவாய நம
ஓம் வஜ்ர தேஹாய நம
ஓம் வைராக்யதாய நம
ஓம் வீராய நம
ஓம் வீத ரோக பயாய நம
ஓம் விபத்பரம் பரேசாய நம
ஓம் விச்வவந்த்யாய நம
ஓம் க்ருத்ர வாஹாய நம
ஓம் கூடாய நம
ஓம் கூர் மாங்காய நம
ஓம் குரூபிணே நம
ஓம் குத்ஸிதாய நம
ஓம் குணாட்யாய நம
ஓம் கோசராய நம
ஓம் அவித்யர் மூல நாசாய நம
ஓம் வித்யாவித்யாஸ் வரூபிணே நம
ஓம் ஆவுஷ்ய காரணாய நம
ஓம் ஆபதுத்தர்த்ரே நம
ஓம் விஷ்ணுபக்தாய நம
ஓம் வசிநே நம
ஓம் விவிதாகம வேதிநே நம
ஓம் விதிஸ்துத்யாய நம
ஓம் வந்த்யாய நம
ஓம் விரூபாக்ஷõய நம
ஓம் வரிஷ்ட்டாய நம
ஓம் க்ரிஷ்டாய நம
ஓம் வஜ்ராங்குசதராய நம
ஓம் வரதாபயஹஸ்தாய நம
ஓம் வாமநாய நம
ஓம் ஜ்யேஷ்டா பத்நீ ஸமேதாய நம
ஓம் ச்ரேஷ்டாய நம
ஓம் மிதபாஷிணே நம
ஓம் கஷ்டௌகநாசகர்த்ரே நம
ஓம் புஸ்டிதாய நம
ஓம் ஸ்துத்யாய நம
ஓம் ஸ்தோத்ரகம்யாய நம
ஓம் பக்தி வச்யாய நம
ஓம் பாநவே நம
ஓம் பாநு புத்ராய நம
ஓம் பவ்யாய நம
ஓம் பாவநாய நம
ஓம் தநுர்மண்டல ஸம்ஸ்த்தாய நம
ஓம் தநதாய நம
ஓம் தநுஷ்மதே நம
ஓம் தநுப்ரகாச தேஹாய நம
ஓம் தாமஸாய நம
ஓம் அசேஷ ஜநவந்த்யாய நம
ஓம் விசஷபலதாயிநே நம
ஓம் வசீக்ருத ஜநேசாய நம
ஒம் பசூ நாம் பதயே நம
ஓம் கேசராய நம
ஓம் ககேசாய நம
ஓம் கநநீலாம்பராய நம
ஓம் காடிந்ய மாநஸாய நம
ஓம் ஆர்ய கணஸ்துத்யாய நம
ஓம் நீலச்சத்ராய நம
ஓம் நித்யாய நம
ஓம் நிர்குணாய நம
ஓம் குணாத் மநே நம
ஓம் நிராமயாய நம
ஓம் நந்த்யாய நம
ஓம் வந்தநீயாய நம
ஓம் தீராய நம
ஓம் திவ்யதேஹாய நம
ஓம் தீ நார்ததி ஹரணாய நம
ஓம் தைந்ய நாசகராய நம
ஓம் ஆர்யஜ நகண்யாய நம
ஓம் க்ரூராய நம
ஓம் க்ரூர சேஷ்டாய நம
ஓம் காமக்ரோதகராய நம
ஓம் களத்ர புத்ர சத்ருத்வ காரணாய நம
ஓம் பரிபோஷித பக்தாய நம
ஓம் பரபீதி ஹராய நம
ஓம் பக்தஸங்கமநோபீஷ்ட பலதாய நம
நாநாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி.
சனீஸ்வர அஷ்டகம்
எட்டு சுலோகங்களான இந்த அஷ்டகம் தசரத சக்கரவர்த்தியினால் திரேதாயுகத்தில் இயற்றப்பட்டதாகும். இந்த ஸ்தோத்திரத்தில் சனீஸ்வர பகவானின் அருமை பெருமைகள் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன. சனிக்கிழமை தோறும் இந்த ஸ்தோத்திரத்தை ஜபிப்போர்க்கு சனிபகவானால் வரும் துன்பம் விலகும். உளுந்து, எள், எண்ணெய், வெல்லம் இவற்றைத் தானம் செய்வது சனிபகவானுக்குப் ப்ரீதியானதாகும். இந்த சுலோகத்தை சனிக்கிழமைகளில், அரச மரத்தடியில் அமர்ந்து படிப்பது மிகவும் விசேஷமாகும்!
கோணாந்தகோ ரௌத்ரயமோ அத பப்ரு:
க்ருஷ்ண: சநி: பிங்கள ஏவ மந்த:
நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
ஸுராஸுரா: கிம்புருஷா கணேந்த்ரா:
கந்தர்வ வித்யாதர கிந்நராச்ச
பஜந்தி பீடாம் விஷம ஸ்திதேந
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
தைலாயஸைர் மாஷ குட ப்ரதாநை:
ஸ்நாநைர் பலா லோத்ரபலைர் யவாத்யை:
ப்ரீணாதி ஸர்வாந் நிஜவாஸரே ய:
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
ஸ்ரஷ்டா ஸ்வயம்பூர் புவநத்ரயஸ்ய
த்ராதா ஹரி: ஸம்ஹரண: பிநாகீ
ஏகஸ் த்ரிதா ருக்யஜு: ஸாமமூர்த்தி:
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
நரா நரேந்த்ரா: பசவோ ம்ருகேந்த்ரா:
த்வந்யே ச யே கீடபதங்க ப்ருங்கா:
பீட்யந்தி வேதாஷ்ட ம்ருகஸ்திதேந
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
தேசாச்ச துர்காணி வநாநி யத்ர
க்ராமா நிவேசா: புரபட்டநாநி
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேந
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
ப்ரயாக கூலே யமுநாதடே ச
ஸரஸ்வதீ புண்யஜலே குஹாயாம்
யோ யோகிபி: த்யேயதமோ அதி ஸூக்ஷ்ம:
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
மாஷைஸ் திலை: கம்பள தேநுதாநை:
லோஹேந நீலாம்பர தாநதோ வா
ந பீடயேத் யோ நிஜவாஸரேண
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
அந்யப்ரதேசாத் ஸ்வக்ருஹம் ப்ரவிஷ்ட:
த்வதீய வாரேஷு ஸுகீ நர: ஸ்யாத்
க்ருஹாத் கதோ யோ ந யத: ப்ரயாதி
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
சந்யஷ்டகம் ய: படதி ப்ரபாதே
நித்யம் ஸுபுத்ரை: பசுபாந்தவைச்ச
கரோதி ராஜ்யம் புவி போக ஸெளக்யம்
ப்ராப்நோதி நிர்வாண பதம் ததாந்தே
கோணஸ்த பிங்களோ பப்ரு:
க்ருஷ்ணோ ரௌத்ரோ அந்தகோ யம:
ஸெளரிச் சநைஸ்சரோ மந்த:
பிப்பலாதேந ஸம்ஸ்துத:
ஏதாநி சநி நாமாநி ப்ராதருத்தாய ய: படேத்
சநைசசரருக்ருதா: பீடா: ந பவந்தி கதாசந
இந்த சுலோகத்தில், சனிபகவானின் பதினோரு நாமங்கள் கூறப்படுகின்றன. இந்த சுலோகத்தை, அதிகாலையில் படிப்பது மிகவும் விசேஷமாகும்.
சனீஸ்வர கவசம்
போர் வீரர்கள், பகைவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அணிவது கவசம். அதேபோல், நாம் நோய் நொடிகளால் வரும் துன்பத்திலிருந்து நமது உடலையும் உள்ளத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக உகந்த கவசமாக அணிந்து கொள்வது தெய்வத்தின் திருநாமங்களாகும். புண்ணிய புராண புருஷர்கள் நமது சுபிஷத்திற்காக தெய்வத்தின் திருநாமங்களைக் கவசமாகக் கொண்டு, இடையறாது ஓதும் வண்ணம் அருளியுள்ளார்கள். சனிபகவான் மீது இயற்றப்பட்டுள்ள சனீஸ்வர கவசம், பிரம்ம தேவனால் அருளப்பட்டதாகும். சனீஸ்வர கவசத்தில், உடம்பினை பதினேழு வகையாகப் பிரிக்கப்பட்டு, சனிபகவானுடைய பதினேழு திருநாமங்களால் ஜபிக்கப்படுகின்றன. இக்கவசத்தை அனுதினமும் படித்து, சனிபகவானின் பேரருளால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஓம் அஸ்ய சநைச்சர கவச மந்த்ரஸ்ய, கச்யப ருஷி: அநுஷ்டுப் சந்த: ரவிபுத்ரோ மந்தகதிர் தேவதா. சம்பீஜம், நம் சக்தி: மம் கீலகம், சநைச்சர ப்ரீத்யர்த்தே கவசஜபே விநியோக:
சநைச்சராய நம: - அங்குஷ்டாயாம் நம:
மந்தகதயே: - தர்ஜநீப்யாம் நம:
அதோக்ஷஜாய நம: - மத்யமாப் நாம் நம:
ஸெளரயே நம: அநாமிகாப்யாம் நம:
சுஷ்கோதராய நம: கநிஷ்டிகாப்யாம் நம:
ச்சாயாத்மஜாய நம: கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:
க்ருஷ்ணாம்பரதரம் தேவம் த்விபுஜம் க்ருத்ரஸம்ஸ் திதம்
ஸர்வபீடாஹரம் ந்ரூணாம் த்யாயேத் க்ரஹகணோத்தமம்
ச்ருணுத்வம் முநயஸ் ஸர்வே ச்நிபீடாஹரம் சுபம்
கவசம் க்ரஹராஜஸ்ய ஸெளரே ரித மநுத்தமம்
கவசம் தேவதாவாஸ: கவசம் வஜ்ரபஞ்ஜரம்
ஸர்வபீடாஹரம் ஸ்ரீமத் ஸர்வ ஸெளபாக்யதாயகம்
சிர: சநைச்சர: பாது பாலம் வை ஸூயநந்தந:
நேத்ரே ச்சாயாஸுத: பாது ச்ரோத்ரே பாது யமஸ் ததா
நாஸாம் வைவஸ்வத: பாது முகம் மே பாஸ்கரிஸ் ததா
சுஷ்ககண்டஸ்து மே கண்டம் பாஹூ பப்ருஸ் ததைவச
ஹ்ருதயம் பிங்கள: பாது கோணஸ்த: பார்சவயோர் யுகம்
நாபிம் நீலாஞ்ஜந: பாது கடிம் ரௌத்ரஸ் ததைவ ச
ஊரூ மமாந்தக: பாது யமோ ஜாநுயுகம் ததா
பாதௌ மந்தகதி: பாது ஸர்வாங்கம் பாது பிப்பல:
அங்கப்ரத்யங்ககம் ஸர்வம் ர÷க்ஷத் ஸூர்யஸுதஸ்ததா
ய ஏதத் கவசம் நித்யம் படேத் ஸூர்யஸுதஸ்ய வை
ந தஸ்ய ஜாயதேபீடா சநைச்சரக்ருதா ஸதா
ஜந்மஸ்தாந கதோவாபி ம்ருத்யுஸ்தாந கதோபி வா
ரந்த்ரஸ்தாந கதோ வாபி சநிபீடா ந தஸ்யவை
இத்யேதத் கவசம் ஸெளரே: திவ்யம் ப்ரஹ்மவிநிர்மிதம்

சனி பகவான் போற்றி
ஓம் அருளுங்கால் இனியனே போற்றி
ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி
ஓம் அலிக்கிரகமே போற்றி
ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி
ஓம் அனுஷத்ததிபதியே போற்றி
ஓம் அன்னதானப் பிரியனே போற்றி
ஓம் அசுப கிரகமே போற்றி
ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி
ஓம் ஆயுட்காரகனே போற்றி
ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி
ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
ஓம் இருவாகனனே போற்றி
ஓம் இளைத்த தேகனே போற்றி
ஓம் இரும்புத் தேரனே போற்றி
ஓம் இரும்பு உலோகனே போற்றி
ஓம் ஈடிலானே போற்றி
ஓம் ஈசுவரனானவனே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உத்திரட்டாதி நாதனே போற்றி
ஓம் உபகிரகமுளானே போற்றி
ஓம் எமன் அதிதேவதையனே போற்றி
ஓம் எள் விரும்பியே போற்றி
ஓம் எவர்க்கும் அஞ்சானே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் ஏழாம் கிரகனே போற்றி
ஓம் கரு மெய்யனே போற்றி
ஓம் கலி புருஷனே போற்றி
ஓம் கழுகு வாகனனே போற்றி
ஓம் கருங்குவளை மலரனே போற்றி
ஓம் கரிய ஆடையனே போற்றி
ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் கருங்கொடியனே போற்றி
ஓம் கருநிறக் குடையனே போற்றி
ஓம் கண்ணொன்றிலானே போற்றி
ஓம் காகமேறியவனே போற்றி
ஓம் காசியில் பூசித்தவனே போற்றி
ஓம் காரியே போற்றி
ஓம் காற்றுக் கிரகமே போற்றி
ஓம் குளிர்க் கோளே போற்றி
ஓம் கும்பராசி அதிபதியே போற்றி
ஓம் குச்சனூர்த் தேவனே போற்றி
ஓம் குளிகன் தந்தையே போற்றி
ஓம் குறுவடிவனே போற்றி
ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் கைப்புச்சுவையனே போற்றி
ஓம் சடையனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி
ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி
ஓம் சனிவார நாயகனே போற்றி
ஓம் சாயை புத்ரனே போற்றி
ஓம் சுடரோன் சேயே போற்றி
ஓம் சூரனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சூர்ய சத்ருவே போற்றி
ஓம் சுக்ர நண்பனே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவபக்தர்க்கடியானே போற்றி
ஓம் சீற்றனே போற்றி
ஓம் செயலறச் செய்பவனே போற்றி
ஓம் தமோகணனே போற்றி
ஓம் தண்டாயுதனே போற்றி
ஓம் தசரதனுக்கருளியவனே போற்றி
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தீபப் பிரியனே போற்றி
ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி
ஓம் துலாராசியிலுச்சனே போற்றி
ஓம் துயரளித்தருள்வோனே போற்றி
ஓம் தைரியனே போற்றி
ஓம் தொலை கிரகமே போற்றி
ஓம் நம்பிக்கிரங்கியவனே போற்றி
ஓம் நளனைச் சோதித்தவனே போற்றி
ஓம் நீலவண்ணப் பிரியனே போற்றி
ஓம் நீண்டகாலச் சுழலோனே போற்றி
ஓம் பத்தொன்பதாண்டாள்பவனே போற்றி
ஓம் பயங்கரனே போற்றி
ஓம் பக்கச் சுழலோனே போற்றி
ஓம் பத்மபீடனே போற்றி
ஓம் பத்திரை சோதரனே போற்றி
ஓம் பிணிமுகனே போற்றி
ஓம் பிரபலனே போற்றி
ஓம் பீடிப்பவனே போற்றி
ஓம் ப்ரஜாபதி ப்ரத்யதி தேவதையனே போற்றி
ஓம் புஷ்பப்பிரியனே போற்றி
ஓம் புதன்மித்ரனே போற்றி
ஓம் பூசத் ததிபதியே போற்றி
ஓம் பேதமிலானே போற்றி
ஓம் பைய நடப்பவனே போற்றி
ஓம் போற்றப்படுபவனே போற்றி
ஓம் மகரத்தாள்பவனே போற்றி
ஓம் மாங்கல்ய காரகனே போற்றி
ஓம் மதிப்பகையே போற்றி
ஓம் மநு சோதரனே போற்றி
ஓம் முடவனே போற்றி
ஓம் முதுமுகனே போற்றி
ஓம் மும்முறை பீடிப்பவனே போற்றி
ஓம் மூபத்தாண்டில் சுற்றுபவனே போற்றி
ஓம் மேல் திசையனே போற்றி
ஓம் மேற்கு நோக்கனே போற்றி
ஓம் யமுனை சோதரனே போற்றி
ஓம் யமனுடன் பிறந்தோனே போற்றி
ஓம் வன்னி சமித்தனே போற்றி
ஓம் வலிப்பு தீர்ப்பவனே போற்றி
ஓம் வக்கரிப்பவனே போற்றி
ஓம் வளை மூன்றுளானே போற்றி
ஓம் வில்லேந்தியவனே போற்றி
ஓம் வில்வப்பிரியனே போற்றி
ஓம் ஸ்ரம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் சனீச்வரனே போற்றி

சனி ஸ்தோத்திரப் பாடல்
முனிவர்கள் தேவ ரேமும்
மூர்த்திகள் முதலி னோர்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன்
மகிமையது அல்லால் உண்டோ
கனிவுள தெய்வம் நீயே
கதிர்சேயே காகம் ஏறுஞ்
சனியனே உனைத் துதிப்பேன்
தமியனேற்கு அருள்செய் வாயே!
(வேறு)
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவு இன்றி சாகா நெறியில்
இச்செகம் வாழ இன்னருள் தாதா!!
சனி மங்களாஷ்டகம்
ஸெளரி: க்ருஷ்ணருசிச்ச பச்சிமமுக: ஸெளராஷ்ட்ரப: காச்யபோ
நாத: கும்பம்ருகர்க்ஷயோ: ப்ரியஸூஹ்ருத்சுரக்ஞயோர்க்ருத்ரக:
ஷட்த்ரிஸ்த: சுபதோசுபோதநுகதிச்சாபாக்ருதௌ மண்டலே
ஸந்திஷ்டந் சிரஜீவதாதிபலத: குர்யாத் ஸதா மங்களம்
பொருள்: காசியப கோத்ரியும், கும்பம், மகரம் ராசிகளுக்கு தலைவரும், மேற்கே தெற்கு முகமாக வில் போன்ற மண்டலத்தில் இருப்பவரும், நீண்ட ஆயுளை அளிப்பவருமான சனி மங்களத்தைச் செய்யட்டும்.
சனிக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சனி பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
சனி பகவானை வழிபடும் போது சொல்ல வேண்டிய சுலோகம்:
விதாய லோஹப்ரதிமாம் நரோதுக் காத் விமுச்யதே பாதாவா அந்ய க்ரஹாணாஞ்சய படேத்திஸ்ய நச்யதி.
மேலும் சனிக்கிழமைகளில் காக்கைக்கு ஆல இலையில் எள், வெல்லம் கலந்த அன்னம் வைத்தால் சனியின் கெடுபிடி நீங்கும் என்பர்.
மேற்கூறி ஸ்லோகங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள திருஞான சம்பந்தரின் பதிகத்தை தினமும் படித்து வந்தால், சனிபகவானைப்போல் கொடுப்பவர் யாருமில்லை. இப்படி என்னதான் விளக்கு போட்டு, பதிகம் பாடி சனிபகவானை வழிபட்டாலும், நாம் எப்போதும் இறை சிந்தனையுடன் நல்லதே செய்து நல்ல முறையில் வாழ்வது மிகவும் முக்கியம்.
போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே
தோடுடைய காது உடையன், தோல்உடையன், தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே
ஆன்முறையால் ஆற்ற வெண்நீறுஆடி, அணியிழைஓர்
பால்முறையால் வைத்த பாதம் பக்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,
பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,
நல்கவல்ல நம்பெருமான், மேயது நள்ளாறே
ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்
ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறுதாங்கும் நம்பெருமான், மேயது நள்ளாறே
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்
எங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச,
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான், மேயது நள்ளாறே
வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவுஅதிர,
அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்
சுட்டு மாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான், மேயது நள்ளாறே
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி
அண்ணல்ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல்ஆகா உள்வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே
மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின்,
மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான், மேயது நள்ளாறே
தண்புனலம் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல
பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே
திருச்சிற்றம்பலம்
தசரதர் போற்றிய துதி
நம: க்ருஷ்ணாய நீலாய சிதிகண்ட நிபாயச
நமோ நீலமயூகாய நீலோத்பல நிபாயச
நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்க்க ச்ருதிஜடாயச
நமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாநக
நம: பௌருஷகாத்ராய ஸ்தூரோம்ணே ச தே நம:
நமோ நித்யம் க்ஷúதார்த்தாய த்ருப்தாய ச தே நம:
நமோ கோராய ரௌத்ராய - பீஷணாய கராளிநே
நமோ தீர்காய சுஷ்காய - காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே
நமஸ்தே கோரரூபாய - துர்நிரீக்ஷ்யாயதே நம:
நமஸ்தே ஸர்வ பக்ஷõய - வலீமுக நமோஸ்துதே
ஸூர்ய புத்ர நமஸ்தேஸ்து - பாஸ்கரே அபயதாயிநே
அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து - ஸம்வர்தக நமோஸ்துதே
நமோ மந்தகதே துப்யம் - நிஷ்ப்ரபாய நமோநம:
தப நாத் ஜாத தேஹாய - நித்ய யோகரதாயச
க்ஞாந சக்ஷúர் நமஸ்தேஸ்து - காச்யபாத்மஜ ஸூனவே
துஷ்டோ ததாஸி ராஜ்யம்த்வம் - க்ருத்த: ஹரஸி தத்க்ஷணாத்
தேவாஸுர மநுஷ்யாச்ச - ஸித்த வித்யாதர உரகா:
த்வயா அவ லோகிதா: ஸர்வே - தைன்யம்ஆசு வ்ரஜந்திதே
ப்ரம்மா சக்ரோயமச்சைவ - முநய: ஸப்ததாரகா:
ரஜ்ய ப்ரஷ்டா: பதந்தீஹ - தவ த்ருஷ்ட்யா அவலோகிதா:
த்வயா அவலோகிதாஸ்தேபி - நாசம் யாந்தி ஸமூலத:
ப்ரஸாதம் குருமே ஸெளரே - ப்ரணத்யாஹித்யம் அர்தித:
ஏவம் ஸ்துத: ஸதா ஸெளரி: - க்ரஹராஜோ மஹா பல:
அப்ரவீக்ச சநிர் வாக்யம் - ஹ்ருஷ்டரோமா ஸபாஸ்கரி:
ப்ரீதோஸ்மி தவ ராஜேந்த்ர - ஸ்தோத்ரேண அநேநஸம்ப்ரதி
அதேயம் வாவரம் துப்யம் - ப்ரீதோஹம் ப்ரததாமிச
த்வயா க்ருதந்து யத் ஸ்தோத்ரம் - ய: படேத் இஹமாநவ:
ஏகவாரம் த்விவாரம்வா-பீடாம் முஞ்சாமி தஸ்யவை
ம்ருத்யு ஸ்தாந கதோவாபி - ஜன்மஸ்தாந கதோபிவா
ய: புமான் ச்ரத்தயா யுக்த: சுசி: ஸ்நாத்வா ஸமாஹித:
சமீபத்ரை: ஸமப்யர்ச்ய-ப்ரதிமாம் லோஹஜாம் மம
மா÷ஷாதநம் திலைர் மிச்ரம் - தத்யாத் லோஹந்து தக்ஷிணாம்
க்ருஷ்ணாம் காம் மஹிஷீம் வஸ்த்ரம் - மாம் உத்திச்ய த்விஜாதயே
மத்திநேது விசேஷேண - ஸ்தோத்ரேண அநேந பூஜயேத்
பூஜயித்வா ஜபேத் ஸ்தோத்ரம் - பூத்வா சைவ க்ருதாஞ்ஜலி:
தஸ்ய பீடாம் நசைவாஹம் - கரிஷ்யாமி கதாசந
கோசரே ஜன்ம லக்னேச - தசாஸு அந்தர் தசாஸுச
ரக்ஷõமி ஸததம் தம்ஹி - பீடாப்ய: அன்ய க்ரஹஸ்யச
அநேநைவ ப்ரகாரணே - பீடாமுக்தம் ஜகத்பவேத்
வரத்வயந்து ஸம்ப்ராப்ய - ராஜா தசரத: ததா
மேநே க்ருதார்த்தம் ஆத்மாநம்-ஸம்யக் ஸ்துத்வா சனைச்சரம்
கோண: சனைச்சரோ மந்த: சாயாஹ்ருதய நந்தந:
மார்தாண்டஜ: ததாஸெளரி: பாதங்கிர் க்ருத்ரவாஹந:
ப்ரும்மண்ய: க்ரூரகர்மாச - நீலவஸ்த்ர: அஞ்ஜநத்யுதி:
க்ருஷ்ண: தர்மாநுஜ: சாந்த: - சுஷ்கோதர வரப்ரத:
÷ஷாடச ஏதாநிநாமாநி - ய: படேச்ச திநேதிநே
விஷமஸ்தோபி பகவான் - ஸுப்ரீத: தஸ்ய ஜாயதே
மந்தவாரே சுசிஸ்நாத்வா - மிதாஹாரோ ஜிதேந்த்ரிய:
தத்வர்ண குஸுமை: ஸம்யக் - ஸர்வாங்கம் த்விஜ ஸத்தம:
பூஜயித்வா அந்ந பாநாத்யை: - ஸ்தோத்ரம் ய: ப்ரயத: படேத்
புத்ரகாமோ லபேத்புத்ரம் - தநகாமோ லபேத்தநம்
ராஜ்ய காமோ லபேத் ராஜ்யம் - ஜயார்த்தீ விஜயீபவேத்
ஆயுஷ்காமோ லபேதாயு: - ஸ்ரீ காம ச்ரியம் ஆப்நுயாத்
யத்யத் இச்சதி தத்ஸர்வம் - பகவான் பக்த வத்ஸல:
சிந்திதாநிச கர்மாணி - ததாதிச நஸம்சய:
சநிநா அதஅந் யநுக்ஞாத: - ஸ்வஸ்தாநம் அகமத்ந்ருப:
ஸ்வஸ் தாந ஸங்கதோ பூத்வா - ப்ராப்தகாம: அபவத்ததா
சனைச்சர ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
முத்துசாமி தீட்சிதர் பாடிய கீர்த்தனங்கள்
பல்லவி
திவாகர தநுஜம் சனைச்ரம் தீரதரம் ஸந்தகம் சுந்தயேஹம் (திவா)
அநுபல்லவி
பவாம்பு நிதௌ நிமக்ன ஜநாநாம் பயங்கரம் அதி க்ரூரபலதம்
பவானீச கடாக்ஷ பாத்ர பூதபக்திமதாம்
அதிசய சுய பலதம் (திவா)
சரணம்
காலாஞ்ஜந காந்தியுக்த தேஹம் காலஸஹோதரம்
காக வாஹநம் நீலாம் சுக புஷ்பமாலா வருதம்
நீலரத்ந பூஷண அலங்க்ருதம்
மாலிநீ விநுத குருகுஹ முதிதம் மகரகும்ப ராசீ
நாதம் திலதைல மிச்ரிதான்ன தீபப்ரியம் தயா
ஸுதா ஸாகரம் நிர்பயம்
கால தண்ட பரிபீடித ஜாநும் காமிதார்த்த
பலத காம தேநும் கால சக்ர பேத சித்ரபாநும் கல்பித
சாயா தேவீ ஸுநும் (திவா)
சூரியதேவனின் குமாரர் தைரியமுள்ளவர். சம்சாரம் என்னும் சாகரத்தில் மூழ்கியோர்க்கு பயங்கரமானவர் - கடுமையான பலனைத் தருபவர். சிவபெருமானது கடாட்சத்திற்கு பாத்ரமான பக்தர்களுக்கு அதிகமான - சுபமான பலனைத் தருபவர். மைபோலும் கருமை நிறம் கொண்ட காகத்தை வாகனமாகக் கொண்டவர். கருமை நிறத்துடன் கூடிய வஸ்திரத்தாலும், புஷ்பத்தாலும் அலங்காரம் செய்யப்பட்டவர். மாலிநீ மந்திரத்தால் துதிக்கின்ற குருகுஹனுக்கு இன்பம் அளிப்பவர். மகரம், கும்பம், ராசிகளுக்கு அதிபதியானவர். எள் அன்னத்திலும், நல்லெண்ணை தீபத்திலும் அத்யந்த பிரேமை மிக்கவர். கருணையில் கடலைப் போன்றவர். பயமற்றவர் யம தண்டத்தினால் வருந்தும் முழங்காலைப் பெற்றவர். நாம் விரும்பியதை அளிக்கும் காமதேனு! காலச் சக்ரத்தைப் பிளக்கும் சூரியன் சாயாதேவியிடம் பிறந்தவர். இப்பேர்ப்பட்ட சனிபகவானை எப்பொழுதும் தியானம் செய்கிறேன். சனி பகவானின் அருளையும், கருணை உள்ளத்தையும் சுந்தர கிருதிகளால் பாடிய தீக்ஷதர் அப்பெருமானை எள் அன்னத்தை நிவேதித்து, நல்லெண்ணை விளக்கேற்றி ஆராதிக்க வேண்டும் என்று கூறுகிறார். சனி பகவானுக்கு, நல்லெண்ணை விளக்கேற்றி, எள் அன்னத்தால் நிவேதிப்பதால், அப்பெருமான் நமது கோசார தோஷங்கள், தசாபுத்தி தோஷங்கள், மற்றுமுள்ள இன்னல்கள் அனைத்தையும் விலகச் செய்து, நமக்கு நல்ல பல பலன்களை அளிப்பார் என்பது திண்ணம்

No comments:

Post a Comment