Tuesday 31 July 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 14 - நான்காம், ஐந்தாம் பாவம்


வித்தை வாகனம் வீடுசுபஞ்சுகம்
மெத்தையன்னை மிகுசுகநான்கதாம்
பத்தின்பாதி பழையசீமான் கந்திரம்
வித்தை புத்திபுத்திரர் செல்வமே


நான்காவது பாவகத்தின் மூலம் வித்தை, வாகனம், வீடு, சுபம் மற்றும் மெத்தை, தழுவணை மிகுவதும் ஆன சுகபோகங்களையும் அறியலாம்.பத்தில் பாதியான ஐந்தாம் பாவம் பூர்வ புண்ணிய ஸ்தானமானதால் முன்னோர் பெருமை கல்வி, வித்தை நலம், சிறந்த புத்தி மற்றும் புத்திரர் செல்வம் ஆகியன பற்றித் தெற்றென எழுதலாம். (எ-று)

இப்பாடலில் நான்காவது, ஐந்தாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment