Tuesday 31 July 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 16 - ஏழாம் பாவம்


சப்தமத்தின் பலன்கேளூ மணமதாகும்
தகுமடந்தை புதல்வர்க்குச் சான்றுமின்பம்
சித்தமுள வுபகார மனஞ்சுற்றத்தார்
அபிமானமரசரது சேர்சன்மானம்
தத்துகயல் விழிமாது சேர்க்கைநன்றாய்
சதிருடனே தான் வந்து சேருமென்று
கொத்தாக நீயறிந்து கூறுவாயேல்
குறிதப்பா பலன் வந்து கூடுமன்றே.


சப்தமஸ்தானம் என்னும் ஏழாம் இடத்தினால் ஏற்படும் பலன்களாவன: மணம் நிகழ்தலும் நல்ல மனைவியும், புதல்வர்கள் வாய்த்தலும் அவர்களால் இன்பம் வாய்த்தலும் சுற்றத்தார் உறவு அதிகமாதலும் அவர்களது அபிமானம் நேருதலும் அரச சன்மானம் வாய்த்தலும் போகஸ்திரீகள் வாய்த்தலும் நிஷ்களங்கமின்றி வந்து சேரும்மென்று ஆராந்து அறிந்து கூறின் புலிப்பாணி குருவருளால் குறித்துச் சொன்ன குறி தப்பாது. [எ-று]

இப்பாடலில் ஏழாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment