Sunday 8 July 2012

விதி


 


 


 

சத்தமின்றி உரைப்பேனே

நித்தம் உன் நினைவை இழப்பேனா

ரத்தம் கசிந்தாலும் ரசிக்கின்றேன்

பித்து பிடித்தாற்போல் சிரிக்கின்றேன்...!


 

உன்னை காணா நாட்களெல்லாம்

உறக்கம் தொலைத்து கிடக்கின்றேன்

கண்கள் மூட மறுத்தாலும்

கனவாய் வந்து போவாயோ...?


 

கள்ளமில்லாமல் கதைப்பேனே

சொல்லும்சொல்லில் இனிப்பேனோ

அல்லும்பகலும் நினைக்கின்றேன்

அன்பால் உன்னை துதிக்கின்றேன்...!


 

உள்ளச்சிறையை அடைத்தாலும்

உறவே நீதானென நினைத்தேனோ

உன்னை மறந்து வாழ்வேனா..

உள்ளம் கசிந்தே சாவேனா...?


 

உன் நினைவில்லாமல் இருப்பேனா

உன் குரலை கேட்கவே தவிக்கின்றேன்

உனக்காய் யாவும் தவிர்ப்பேனே

உன்னால் தானே வாழ்கின்றேன்...!


 

உன்னுள் தொலைத்து விடுவேனோ

என் இதயம் தேடி அலைவேனோ

உன்னை நினைத்தே இருக்கின்றேன்

மண்ணுள் புதைத்தாலும் இறப்பேனா...?


 

நீயும் சொல்லாமல் இருப்பாயோ

நானே சொல்வேனென நினைப்பாயோ

நம்முள் பிழையில்லை யென்றாலும்

நண்பர்கள் கேலியும் குறையாதே...!


 

இருள் சூழ்ந்த வேளையிலும்

உன்னை நிழலாகவே தொடர்கின்றேன்

உண்மை சொன்னால் புரியாதா

என்னை நீயும் ஏற்பாயோ...?


 

கள்ளத்தனமாய் இருப்பேனா

உள்ளுக்குள்ளேயே மறைக்கின்றேன்

எல்லாம் அவன் செயல் தானென்று

விதியை நினைத்தே சிரிக்கின்றேன்...!

No comments:

Post a Comment