பாதிப்
பாவாடை தமிழ் பெண்ணே
மீதியை
யாரிடம் தந்தாயோ
வீட்டிலே
அப்பனின் ஏழ்மையை தீர்க்க
ஆடைகட்கு
விரதம் புனைந்தாயோ ?
சீதனக்
கொடுமையைப் போக்கிடவே
சிக்கனச்
செயல் ஒன்று கொண்டாயோ?
சீர்கெட்ட
ஆடவன் ஒருவனை உளச்
சீமானாய் ஏற்றாயோ?
பாலியல்
போதையில் சிக்குண்டே
நீ
மாதவி ஆனாயோ?
பாதியில்
கருவைப் பெற்றெடுத்தே -அதை
வீதியில்
சிதைத்தாயோ?
பள்சரின்
பேசரின் வேகங்கள்
உன்னைக்
கண்ணகி ஆக்கிடாது
பெயார் அன்ட் லவ்லி நொடிவனப்பு தமிழ்
பெருமை சேர்த்திடாது
கண்களால் ஜாடைகள் செய்வது
உன் கற்பை உயர்த்திடாது
கற்பிழந்த பின்னர் கைபேசி மீள்நிரப்பு
கண்ணீர் துடைத்திடாது
தாராளம் காட்டும் தமிழ் பெண்ணே
ஏராளம் சொல்வேன் புத்தி
பாரதி ஆத்மா இன்னும் ஆறவில்லை
உன் தறிகெட்ட செயல் கண்டு ...!!
No comments:
Post a Comment