உன்னுடன் வாழ்ந்த
ஒவ்வொரு கணத்திலும்
வேர்களை பிடித்திருந்த நிலமாய்
உயிரோடு கலந்திருந்தாய்.
உதிரும் போதெல்லாம்
மறுபடி மறுபடி
முளைக்க செய்தாய்...
உடல் பிரியும் முன்
ஏதேதோ பேச
நினைக்கிறேன்.
எதுவுமே பேசமல்
உனக்காக காத்திருப்பேன்..
அதுவரை காத்து ‘இருப்பேன்’
கண்களாலே சொல்லி
உன் மடியிலே
என்
எழும்பாத் துயில்.............
No comments:
Post a Comment