Saturday 7 July 2012

எழும்பாத் துயில்.............



உ‎ன்னுட‎ன் வாழ்ந்த

ஒவ்வொரு கணத்திலும்

வேர்களை பிடித்திருந்த நிலமாய்

உயிரோடு கலந்திருந்தாய்.

உதிரும் போதெல்லாம்

மறுபடி மறுபடி

முளைக்க செய்தாய்...

உடல் பிரியும் மு‎ன்

ஏதேதோ பேச

நினைக்கிறே‎ன்.

எதுவுமே பேசமல்

உனக்காக காத்திருப்பேன்..

அதுவரை காத்து ‘இருப்பேன்’

கண்களாலே சொல்லி

உன் மடியிலே

எ‎ன்

எழும்பாத் துயில்.............

No comments:

Post a Comment