Sunday 1 July 2012

நினைவில் இன்று.......





உன் நினைவுகளால் ஓர் நந்தவனம் ஆனேன் - அன்று
நீ இன்றி ஓர் நடைப்பிணம் ஆனேன் இன்று
இதுவோ காதல் என்பது........
நினைவுகள் வந்து வாசம் வீசிச்சென்றாலும்
நிஜத்தில் அவை வாசம் தர மறுப்பதால் தானோ
அவை நினைவுகள் மூலமாவது வந்து வாசம் வீசிச்செல்கின்றன.....

பாலைவனமாக கிடந்த என்னுள்
உன் பார்வை ஆற்றை ஓட வைத்தாய் - பின்
எனை பாலைவன நாட்டுக்கே நாடுகடத்தச் செய்துவிட்டாய்
நாடு கடந்து வந்தாலும் நலமாய் இருக்க முடியவில்லை...
உன் நினைவுகள் வந்து கண்ணின் ஓரங்களை
ஈரமாக்கிவிட்டுச் செல்கின்றன
என் கைகள் ஏனோ அதை துடைக்க மறக்க
அங்கு சிறு ஊற்று வருகிறதே....

No comments:

Post a Comment