பெண்ணே
உன்னை
வெறுக்கிறேன் -உன்
பெயரும்
இன்று மறுக்கிறேன்
துண்டு
துண்டாய்க் கிழிக்கிறேன்
நினைவைத்
தீயில்
இட்டுப் பொசுக்கிறேன்
என்னைப்
பார்த்தே முறைக்கிறேன்
உன்
கனவைக் காணும்
கண்ணைச்
சிதைக்கிறேன்
ஆசை
இல்லை
மறக்கிறேன்
-இன்று ஆவி
செல்லத்
துடிக்கிறேன்
உன்
படைப்பில்
பிழைகள்
காண்கிறேன்
அதனால்
பிரமனைக்
கொல்லத் தான்
நினைக்கிறேன்
அழுது
கொண்டும் சிரிக்கிறேன் -இந்த
நடிப்பை
உன்னால் கற்கிறேன்
வேஷம்
போட்டுத் திரியும் உன்னால்
வேதனையில்
வாழ்கிறேன்
காதல்
வோட்டுக்கள் தேவை அதனால்
நானும்
வேட்பாளன் போல்
வேட்கை
கொண்டு நடக்கிறேன்
உன்
மௌனம் கொடிது
வெடிக்கிறேன்-மலராய்
மலர்ந்து
மடிகின்றேன்
உன்னை
அழிக்க விரைகின்றேன் -பின்
நீயாய்
நான் வாழ கரைகின்றேன்
No comments:
Post a Comment