Saturday 21 July 2012

பழைய காதலிக்கு



உன்
ஒற்றை வார்த்தையில்
எனைவிட்டுப்
பிரிவதாக கூறி
என் மனத்தை
ரணமாக்கினாய்;
சில தருணங்களில்
நாமிருந்த கணங்களை
மறந்துபோனதாக
கூறி என்
நிகழ்வுகளை
கேள்விக்குள்ளாக்கினாய்
உன் கண்ணில்
என் இரட்டை இதழ்கள்
பதித்தசத்தமில்லா
முத்தத்தை -
நெற்றி வகிட்டில்
நித்தம் ஓடிய என்
சுட்டு விரல் தடத்தை
உன் எடுப்பான நாசி
மேல் தினம் மேய்ந்த
என் கருத்த மீசை
மதற்த்த உன் மார்பில்
பதித்த என்
நகக்குறிகளை
இப்படி எதை
வேண்டுமானாலும்உன்னால்
மறக்க முடியும்
என்னை?

No comments:

Post a Comment