Tuesday 17 July 2012

ஆண் பெண் ரகசியம் பகுதி 12



எந்தப் பெண்ணை ஏற்கலா காது?

விடிய விடிய வீட்டின் வாசலில்

நின்றுகொண் டிருப்பவள் நிம்மதிக் கெடுப்பாள்.

விழித்து விழ்த்து வீதியைப் பார்ப்பவள் 

பழிக் கஞ்சாத பாவையாய் இருப்பாள்.

ஆடவர் தம்மை ஆசை வழிய 

உற்றுப் பார்ப்பவள் உணர்ச்சி நெருப்பு. 

தன்னை பார்ப்பவர் யாரா னாலும்

தானும் பார்ப்பவள் தரமில்லா நங்கை!

வலியச் சென்று வாலிபர் தம்மை 

பேச்சுக் கிழுப்பவள் பெண்ணிலே கடைசி!



ஆண்கள் கூட்டத்தில் அதிகம் இருந்து 

பழகி மகிழுபவள் பத்தினி யல்ல!

பெற்றோர் சொல்லை பெணா தொழிந்து 

களியாட் டங்களில் கலந்து கொள்பவள் 

குடும்ப வாழ்க்கையைக் கொடுநர கமாக்குவால்!

பிறந்த குலத்தின் பெருமையை மறந்து 

திறந்த மார்புடன் திரிந்திடும் பேதையர் 

என்றும் எங்கும் எவர்வந் தாலும் 

திறந்த வீடுபோல் திறந்தே கிடப்பர்!

எந்தப் பரிசை எவர்க்கொடுத் தாலும்

பெற்றுக் கொள்ளும் பேதையர் ஒருநாள் 

காசுக் காகவே கற்பை  இழப்பர்!     

No comments:

Post a Comment