Monday, 13 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 265 - கேது மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்


உண்டான கேதுதிசை ராகுபுத்தி
உண்மையில்லா நாளதுவும் வருடம் ஒன்று
நன்றாகும் நாளதுவும் மூவாறாகும்
நலமில்லா அதன்பலனை நவிலக்கேளு
விண்டாகுஞ் சத்துருவால் சோரபயமாகும்
வினையான மனைவிதன்னால் வீண்கலகமாகும்
ஒன்றாகும் உன் உடம்பில் பிணியுண்டாகும்
உறுதியில்லா உந்தெய்வம் ஓடுந்தானே


கேது மகாதிசையில் இராகுபகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 18 நாள்களாகும். நன்மை தராத அக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களைக் கூறுவோம். கவனமாய்க் கேட்பாயாக! பகைவராலும், திருடர்களாலும் மிகு பயம் ஏற்படும். சந்தேகம் கொண்ட மனைவியினால் குடும்பத்தில் வீண் கலகம் ஏற்படும். தேகத்தில் வியாதி காணும், இச்சாதகனின் குலதெய்வமானது இவன் மனையில் தங்காது குடியோடிப் போகும் என்று போகமா முனிவர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் கேது மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment