Monday 27 August 2012

சுய முயற்சியால் யாரெல்லாம் சாதனை செய்ய முடியும்?

 

 
3ம் பாவத்தின் சிறப்பு
 
பொதுவாக ஜனன ஜாதகத்தில் உள்ள கிரக நிலையைக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையை தெளிவாக நிர்ணயம் செய்யலாம். ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்பம்சங்கள் உண்டு. தற்போது 3ம் பாவத்தின் சிறப்பம்சங்களைப் பற்றி இங்கு தெளிவாகப் பார்க்கலாம்.

ஜென்ம லக்னத்திற்கு 3ம் பாவத்தைக் கொண்டு ஒருவரது முயற்சி, தம்பி, தங்கை யோகம், காது, தோள்பட்டை, இசை ஞானம், வேலையாட்கள் போன்றவற்றைப் பற்றி தெளிவாக அறியலாம்.

3ம் வீட்டில் சுப கிரகங்கள் அமையப் பெற்றாலும், சுபர் பார்வை 3ம் வீட்டிற்கு இந்தாலும் உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம், பொருளாதார மேன்மை உண்டாகும். 3ல் சூரியன், செவ்வாய், குரு போன்ற ஆண் கிரகங்கள் அமையப் பெற்றால் ஆண் உடன் பிறப்பும் சுக்கிரன் சந்திரன் அமையப் பெற்றால் தங்கை யோகமும் உண்டாகும். 3ல் குரு அமைந்திருந்தாலும் 3ம் வீட்டை குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் பார்த்தாலும் உடன் பிறந்தவர்கள் வசதி வசய்ப்புடன் வாழக்கூடிய அமைப்பு உண்டாகும்.

3ல் சனி அமையப் பெற்று செவ்வாய் பார்த்தால் சகோதர வழியில் இழப்புகள் ஏற்படும். 3ம் வீட்டில் சனி, ராகு அமையப் பெற்றால் கடுமையான சகோதர தோஷமாகும். இளைய உடன் பிறப்புகள் ஏற்படாது.

சகோதர காரகன் செவ்வாய் பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் பாவ கிரக சேர்க்கைப் பெற்றாலும் உடன் பிறந்தவர்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் உண்டாகும். 3ல் சுக்கிரன் அமையப் பெற்று அதனை சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் பார்வை செய்தால் உடன் பிறந்த சகோதரிகளுக்கு தோஷமாகும்.

3ம் வீட்டில் சுக்கிரன் சந்திரன் இணைந்து அமையப் பெற்றாலும், 3ம் வீடு சுக்கிரன் சந்திரன் வீடாக இருந்து, சுக்கிரன், சந்திரன் பரிவர்த்தனை பெற்றோ ஆட்சி, உச்சம் பெற்றோ இருந்தாலும் கலை, இசை போன்றவற்றிலும், சங்கீதத்திலும் ஈடுபாடு உண்டாகும்.

3ல் பாவ கிரகங்கள் பலமாக அமைய பெற்று சுபர் பார்வை ஏற்பட்டிருந்தால் எடுக்கின்ற முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும் அமைப்பு, சுய முயற்சியால் பல்வேறு சாதனைகளை செய்யும் அமைப்பு உண்டாகும்.

3ல் சனி ராகு இணைந்திருந்தால் நகத்தில் பாதிப்பு உண்டாகும். அதுமட்டுமின்றி 3, 11ல் சனி ராகு அமையப் பெற்று புதன் பலமிழந்தால் காதுகளில் பாதிப்பு உண்டாகும். சூரியன் செவ்வாய் 3ல் இருந்து பாவ கிரகங்கள் பார்வை பெற்றால் எலும்பு முறிவு ஏற்படுகிறது.

அதுபோல 3ல் செவ்வாயை பாவகிரகங்கள் பலமாக பார்வை செய்தாலும், பாவ கிரக சேர்க்கை பெற்றாலும் கையில் ஏதாவது ஒரு ஆயுதத்தால் அடிபடக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.

அதுமட்டுமின்றி 3ல் பாவ கிரகங்கள், பலமாக அமையப் பெற்று சுபர்பார்வையின்றி இருந்தால் கை கால் வலி, வாத நோய் உண்டாகும். குறிப்பாக 3, 9ல் பாவ கிரகங்கள் இருப்பதன் மூலம் கை கால்களில் முட்டிகளில் வீக்கம் உண்டாகும். 3ல் கிரகங்கள் பலமிழந்திருந்தாலும், சனி பகவான் பலமிழந்து பாவகிரக சேர்க்கைப் பெற்றாலும் வேலையாட்களால் அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.

No comments:

Post a Comment