Tuesday 28 August 2012

செவ்வாய் எந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு?



செவ்வாய் எந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு?

செவ்வாய் லக்னத்தில் இருந்தால் திருடர்களாலும், எதிரிகளாலும் இரத்த காயம் ஏற்படல்.
உடல் அளவில் ஏற்படும் கஷ்டங்களும் பாதிப்புகளும்,பெற்றோரிடம் பாசமின்மை,கண் நோய்,
தலையில் காயம்,நெருப்பில் கண்டம் ,சக்திமிகுந்த உடல் வியாதி, மூட சிந்தனை ,
சிறிய விஷயத்தை பெரிதாக எடுத்துகொள்ளுதல்,சுய நலம்,தற்புகழ்ச்சி முதலியன.
செவ்வாய் 2ல் இருந்தால் தனது பேச்சாலேயே பிரச்சனைகள் வரும். குடும்பம்
பொருளாதரங்களில் ஏற்படும் பிரச்சனைகள்.தாராளமனசு ,ஊதாரி செலவு ,கபடமற்ற
வெளிப்படையான மனம் ,பூர்விக சொத்துக்கள் சட்ட ரீதியாக பெறுதல் முதலியன
செவ்வாய் 3ல் இருந்தால் சகோதர வகையில் பிரச்சனை
செவ்வாய் 4ல் இருந்தால் சுக அளவில். குடும்ப சந்தோஷம் வாழ்க்கை வசதிகளில் பிரச்சனை,
மார்பு வலி ,இதய நோய் ,வாகன விபத்து , கல்வியில் மந்தம் ,உறவினர்
சந்தோஷமின்மை ,அரசியல் வெற்றி ,தாயாருடன் தகராறு ,சொந்த வீடு
ஆனாலும் மகிழ்ச்சியில்லாத நிலை முதலியன.
செவ்வாய் 5ல் இருந்தால் புத்திர பிரச்சனை கர்பம் கலைதல் தத்து புத்திரம்...
செவ்வாய் 6ல் இருந்தால் இரத்த சம்பந்தமான நோய் எதிரிகளால் தொல்லை
செவ்வாய் 7ல் இருந்தால் மனைவிகளால் ஏற்படும் பிரச்சனை.வாழ்க்கைத் துணை ,திருமணம் ,
மணவாழ்வு ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனை.குறுக்கு புத்தி,கோபம் ,சூதாட்ட ஆர்வம் ,
புத்திகூர்மை ,தைரியம் ,வாழ்க்கையில் போராட்டம் முதலியன
செவ்வாய் 8ல் இருந்தால் பாலின உறுப்புகளில் ஏற்படு்ம் பிரச்சனை .ஆயுள் குறைபாடு,
மாங்கல்யம் குறைபாடு,குறைவான எண்ணிக்கையில் வாரிசுகள்,உறவினர்களிடம்
வெறுப்பு ,இல்லற வாழ்வில் சண்டை சச்சரவு ,மூல நோய் முதலியன
செவ்வாய் 12ல் இருந்தால் பாலியல் மகிழ்ச்சி மற்றும் படுக்கை சுகம் ஆகியவற்றில் பிரச்சனை,
மனைவி இழப்பு ,சுய நலம் ,உஷ்ணநோய் ,வெறுப்புணர்ச்சி ,பணக்கஷ்டம் ,கொடூரகுணம்,
வீண் செலவுகள்,அறுவை சிகிச்சை, இளமையில் திருமணம்,விவாகரத்து முதலியன.

No comments:

Post a Comment