Monday 13 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 264 - கேது மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்


தானென்ற கேதுதிசை செவ்வாய்புத்தி
தாழ்வான நாளதுவும் நூத்தியிருபத்தியேழு
வானென்ற அதன்பலனை வழுத்தக்கேளு
வண்மையுடன் சத்துரு தானே உண்டாம்
கோனென்ற திரவியமும் சேதமாகும்
கோதையரால் குலமதுவு நாசமாகும்
தேனென்ற திரவியமும் சேதமாகும்
தெகுட்டாத துணை தம்பி தீதுண்டாமே


இனி இக்கேது பகவானின் திசையில் செவ்வாயின் ஆதிக்க காலம் 4 மாதம் 27 நாள்களாகும். இக்காலகட்டத்தில் இவரால் நிகழ்த்தப் பெறும் பலன்களைக் கூறுவோம். கவனமாகக் கேட்பாயாக! வலிமையுள்ள இனஜன பந்துக்களும் தாமறியாதவாறே சத்துருக்களாக மாறிப் போவர். மனையில் சிலர் கோள் சொல்லுதலால் குடும்பம் பாழாகும். பெண்களால் குல நாசம் ஏற்படும். நிதானித்துத் திரட்டிய வெகுதனமும் விரயமாகிப்போகும். சகோதர விரோதம் உண்டாகி அதனால் தீமை மிக்க பலனே நேரும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் கேது மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment