Thursday 20 September 2012

உங்களின் பொருளாதார தேவைகள் நிறைவேற ஒரு பொன்னான வாய்ப்பு ( A must read Article)

 
ஆமா இவரு பெரிய குபேரன் வீட்டு கொடுக்கு , சாப்பிடுடா - இது கொஞ்சம் வசதி இல்லாத வீட்டில் , பிள்ளைகள் சாப்பிட முகம் சுளிக்கும்போது - கிடைக்கின்ற அர்ச்சனை. குபேரன் செல்வத்துக்கு அதிபதியாக நமது இந்து மதம் கூறுகிறது.
தேவ லோகத்தில் இவர்தான் கஜானாவுக்கு இன்சார்ஜ். இவருக்கு முறைப்படி பூஜை செய்து வழிபட , அவர் நமக்கு செல்வத்தை அள்ளித் தருவார் என்பது நம்பிக்கை. நம்ம நாட்டில, தங்க கடை வைச்சு இருக்கிற எல்லா சேட்டுக்களும் தவறாமல் - குபேர பூஜை செய்பவர்கள்.

அப்படிப் பட்ட குபேரன் , வடக்கு திசைக்கு அதிபதியாக இருக்கிறார். அவர் இந்த நிலையை அடைய - அண்ணாமலையில் சிவலிங்கத்தை நிறுவி , சிவனை நினைத்து தவம் செய்து இருக்கிறார். அப்படி அவர் நிறுவிய லிங்கம் தான், குபேர லிங்கம்.

இந்த குபேர லிங்கத்தை - குபேர பகவான் - சில குறிப்பிட்ட தினங்களில் வழிபாடு செய்து , சிவன் அருளைப் பெறுவதாக நம்பப்படுகிறது. அப்படி அவர் , வெகு நிச்சயமாக பூஜை செய்யும் நாள் பற்றி , இப்போது பார்க்க விருக்கிறோம்.

நமக்கும் குபேர சம்பத்து வேண்டும் அல்லவா? அப்படி சூட்சுமமாக குபேரன் பூஜை செய்யும் வேளையில் - நாமும் அங்கு இருந்தால், அவர் பார்வை நம் மீதும் விழக்கூடும்.. குபேரன் பூஜை செய்வதால் - அந்த அண்ணாமலையாரும் அந்த வேளையில் அங்கு ஆனந்தமாக வீற்று இருக்கக் கூடும்...

நமது பழைய வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கக்கூடிய விஷயம் இந்த குபேர கிரிவலம். நமது புது வாசகர்களும் தெரிந்து கொள்வதற்காக இந்த பதிவு.

நேரமோ , என்னவோ - நல்லவிதமா வாழ்க்கையில, பண வசதியோட ஓஹோன்னு இருக்கவேண்டிய ஆளு சார் நானு.. நான் பார்த்த வேலை அப்படி, கை நிறைய சம்பளம், ஆனால் இப்போ பாருங்க , சம்பளம் எல்லாம் வருது. கையில தான் எதுவும் நிக்க மாட்டேங்குது. நல்லா போயிக்கிட்டு இருந்துச்சு. இடையில ஒரே ஒரு விஷயம் சொதப்புச்சு , இப்போ.... தலைக்கு மேல கடன், வட்டி... இதெல்லாம் விட கொடுமை, இது எப்போ முடியும்னு கூட தெரிய மாட்டேங்குது. நம்பிக்கையே விட்டுப் போச்சு சார். ஏதாவது ஒரு அதிசயம் நடந்துடாதான்னு நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன் சார். கொஞ்சம் கட்டத்தைப் பார்த்து சொல்லுங்கன்னு , நம்ம கிட்ட வர்றவங்கள்ல பத்துக்கு நாலு பேராவது உண்டு.
ஆறுக்குரியவன் தசை , ஆறுக்கு உரியவன் சாரம் பெற்றவர் தசை , அஷ்டம , ஏழரை சனி நடப்பவர்களுக்கு - பொருளாதார வீழ்ச்சி பெரும்பாலும் நடந்து விடுகிறது .

நம்மிடம் வரும் அன்பர்களில் , நிஜமாகவே நொந்து நூலானவர்களுக்கு மட்டும் - இந்த குபேர கிரிவலம் பற்றி தெரிவிப்பது உண்டு. குபேர கிரிவலம் ஒரு ரகசியமாக வைத்து இருக்க வேண்டிய விஷயமாதலால் - மேலும் விவரங்களுக்கு நமது சென்ற வருட பதிவை Refer செய்து கொள்ளவும்.

உங்களுக்கு வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக , ஒரு சுமுகமான நிலை வர வேண்டும் என்று விரும்பினால் , நீங்களும் இந்த தினத்தைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் ஜாதக அமைப்புப் படி - கிடைக்கும் பலன்கள் , முன்னே பின்னே தாமதப் பட்டாலும், நீங்கள் இப்போது இருக்கும் நிலையை விட - ஒரு படி நிச்சயம் முன்னேறுவீர்கள்.

இந்த வருடம் குபேர கிரிவலம் 23.11.2011 புதன்கிழமை வருகிறது.அன்று மாலை சரியாக 4 மணி இலிருந்து மாலை 6 மணி வரை குபேரலிங்கத்திடம் , உங்கள் நியாயமான கோரிக்கையை வையுங்கள். பூஜை முடிந்த பிறகு - அங்கிருந்து நீங்கள் கிரிவலம் தொடங்கி , முடிக்க வேண்டும். புதன் கிழமையாக இருப்பதால் மாலை 4 மணி முதல் 5 மணி வரை குரு ஹோரையும் சேர்ந்து வருகிறது.

கிரிவலம் செல்லும்போது எவரிடமும் பேசாமல்,மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு செல்லவும். ஐயா மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் கூறியபடி மஞ்சள் ஆடை , அல்லது வேஷ்டி அல்லது ஒரு கைக்குட்டையாவது வைத்து இருந்தால் , உங்கள் உடலில் இந்த மந்திர ஆகர்ஷணம் தங்கும்.
குபேர லிங்கத்தில் ஆரம்பித்து , ஈசான்ய லிங்கம் வந்து - அண்ணாமலையாரை தரிசித்து விட்டு - ராஜ கோபுரத்தில் கிரிவலம் தொடங்கி , பின் அஷ்ட லிங்கங்களை வரிசையாக தரிசித்து விட்டு - ராஜ கோபுர வாசலில் கிரிவலம் முடிப்பது உசிதம்.

இந்த நாள் என்று இல்லாமல் , எல்லா நாளுமே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது , மிக மிக நல்ல காரியம். இந்த நாளுக்கு இப்படி ஒரு சக்தி இருப்பது உண்மையோ , பொய்யோ - பௌர்ணமி அல்லாத ஒரு சாதாரண நாளில் , நிம்மதியாக - சுற்றி இருக்கும் கூட்டத்தின் தொந்தரவு இல்லாமல் , மன அமைதியுடன் கிரிவலம் வர முடியும். அஷ்ட லிங்கங்களை கண் குளிர தரிசனம் செய்ய முடியும்.

சாதாரண நாளில் கூட ஒரே ஒரு முறை - குபேர லிங்க வாசலில் ஒருவருக்கு அன்னதானம் செய்தவர்களுக்கு - ஒரு மாதத்துக்குள்ளாகவே - இரண்டு மடங்கு சம்பளத்துடன் புதிய வேலை கிடைத்தும் இருக்கிறது.

எல்லாம், பதி பக்தியுடன் , நம்பிக்கையுடன் - நாம் வேண்டும் முறையில் தான் இருக்கிறது.. அப்படி இருக்கும்போது , இந்த நாளை பயன்படுத்துவது நல்லது என்பது என் அபிப்பிராயம்.......

நான் கடந்த மூன்று வருடங்களாக , இந்த தினத்தை தவற விடுவது இல்லை. முதல் இரண்டு வருடங்களில் இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்த பிறகு, சென்ற வருடம் என் நண்பர்களுக்கு தெரியப்படுத்தியதில் - பதினோரு பேர் சென்ற வருடம் வந்து இருந்தனர். ஒரு ஆய்வுக்காக அவர்களின் இந்த ஒரு வருட நிலையை ஆராய்ந்ததில் - மூன்று பேர் , நல்ல வேலை கிடைத்து வேறு கம்பெனிக்கு சென்று உள்ளனர். ஐந்து பேருக்கு அவர்கள் கம்பெனியிலேயே - பதவி உயர்வு கிடைத்து இருக்கிறது. மீதி மூன்று பேருக்கு - பெரிய அளவில் ஏற்றம் இல்லையெனினும், ஓரளவுக்கு நிம்மதியுடன் இருக்கின்றனர்.

பதவி உயர்வு அடைந்தவர்களுக்கு - எதேச்சையாக நடந்த ஒரு விஷயமாக நினைத்தாலும், பல வருடங்களாக இழுபறியாக இருந்த விஷயம் அது.

இந்த பதினோரு பேரில் சிலருடன் இந்த வாரத்தில் பேசியபோது - அனைவரும் தவறாமல் வருவதாக கூறி இருக்கிறார்கள்.

உங்களில் யாரேனும் வருவதாக இருந்தால் - அதற்க்கேற்ப இன்றிலிருந்தே தயாராகுங்கள். வாய்ப்பு கிடைப்பது அரிது..! யோகம் உள்ளவர்கள் நிச்சயம் வர முடியும். நம்பிக்கையுடன் வருபவர்களுக்கு , அந்த அண்ணாமலையாரின் அருளும், லட்சுமி கடாட்சமும், குபேர சம்பத்தும் நிச்சயம் உண்டு..!

நேரம் தாராளமாக இருந்தால் , அண்ணாமலை கிரிவலம் முடிந்து திருப்பதி சென்று வருதல் , கூடுதல் விசேஷமாக அமையும்.

மழை நேரமாக இருப்பதால் , அதற்க்கு தகுந்த ஏற்பாடுகளுடன் வருவது நல்லது.

முயற்சி செய்து பாருங்களேன்..!


Read more: http://www.livingextra.com/2011/11/must-read-article.html#ixzz2754W8H00

8 comments:

  1. Sir why have'nt you published new articles after 2012 this blog is really good to read, please continue this blog to be active

    ReplyDelete
  2. Bala.
    Sir, Kindly inform me this year in 2013, Kubera Girivalam Day falls on which date?

    ReplyDelete
  3. Bala.
    Sir, Kindly inform me this year in 2015, Kubera Girivalam Day falls on which date?

    ReplyDelete
  4. Sir,
    Sir, Kindly inform me 2016, Kubera Girivalam Day

    ReplyDelete
  5. Yeah its Nov 27th the pooja for Kubera Lingam starts from 6pm to 7pm and the girivalam starts

    ReplyDelete