Tuesday 18 September 2012

உங்கள் கடன் தீர - ஜோதிடம் கூறும் வழி


நமது தமிழ்வருடம் விக்ருதியில் சில குறிப்பிட்ட நாட்களில்,சில குறிப்பிட்ட நேரங்கள் வரும்.அந்த நேரங்களுக்கு மைத்ர முகூர்த்தம் என்று பெயர்.இந்த நேரத்தை முறையாகப் பயன்படுத்தினால்,நமது கடன் முழுமையாகத் தீர்ந்துவிடும். எப்படி என்பதைப் பார்ப்போம்:

நான் ராமன் என்பவரிடம்15.7.2004 அன்று ரூ.1,00,000/-கடன் வாங்கியிருக்கிறேன்.வருடங்கள் பல கடந்தும்,என்னால் வட்டி மட்டுமே கட்ட முடிகிறது.எனக்கோ எரிச்சல்! உழைக்கும் சம்பளம் வட்டி கட்டவே சரியாகிவிடுகிறது என நான் நினைக்கிறேன்.எப்படி நான் இந்த ஒரு லட்ச ரூபாய்க் கடனை அடைப்பது?

கீழே ஜோதிடப்படி, மைத்ர முகூர்த்த நேரங்கள் கணிக்கப்பட்டு,தரப்பட்டுள்ளன.இந்தப் பட்டியலில் வரும் நேரத்தில்,நான் ராமன் என்பவரை சந்திக்க வேண்டும்.

நான் ரூ.1,00,000/-வாங்கினேன் அல்லவா? அதற்கு வட்டி மாதா மாதம் தந்துகொண்டிருக்கிறேன் என கூறியிருக்கிறேன்.இந்த நேரத்தில் அசலில் ஒரு பகுதியைக் கொண்டு சென்று,(உதாரணம் ரூ.5000/- அல்லது ரூ.10,000/-) ராமன் அவர்களிடம் கொடுத்து இந்த நேரத்தில் வரவு வைக்கச் சொல்ல வேண்டும்.

இப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை மைத்ர முகூர்த்தத்தில் கடன் வாங்கியவரிடம் செலுத்திவிட்டால்,அதன்பிறகு,மீதிக் கடன் தொகை(ரூ95,000/- அல்லது ரூ.90,000/-) வெகு விரைவாக,வெகு எளிதாகத் தீர்ந்துவிடும்.

விக்ருதி வருடத்தின் மைத்ர முகூர்த்தங்கள்:

1.1.2011 சனி காலை 4.21 முதல் காலை 6.21 வரை

1.1.2011 சனி காலை 8.21 முதல் காலை 10.21 வரை

1.1.2011 சனி மதியம் 2.21 முதல் மாலை 4.21 வரை

1.1.2011 சனி இரவு 8.21 முதல் இரவு 10.21 வரை

13.1.2011 வியாழன் மதியம் 12.15 முதல் 2.15 வரை

28.1.2011 வெள்ளி நள்ளிரவு 1.37 முதல் விடிகாலை 3.37 வரை

9.2.2011 புதன் காலை 10.45 முதல் மதியம் 12.45 வரை

24.2.2011 வியாழன் இரவு 11.39 முதல் நள்ளிரவு 1.39 வரை

8.3.2011 செவ்வாய் காலை 9.53 முதல் காலை 11.53 வரை

9.3.2011 புதன் காலை 9.01 முதல் காலை 11.01 வரை

24.3.2011 வியாழன் இரவு 9.45 முதல் இரவு 11.45 வரை

5.4.2011 செவ்வாய் காலை 6.46 முதல் காலை 8.46 வரை

கடன் இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும் என்பது எனது ஆசை.இந்த ஆசையை நீங்களும் உங்களது லட்சியமாக்கிடலாம்.

சென்ற(மார்ச் 3 ஆம் வாரத்தில்),ஜீனியர்விகடனில் வந்த ஒரு செய்தி என்னை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது.திருப்பூர் அருகே பள்ளிப்பாளையம் என்ற ஊரில் ஒரு சாதாரண குடும்பத்தினர், ஒரு கந்து வட்டி கும்பலிடம் கடன் வாங்கியிருந்தனர்.வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாததால்,அந்தக் குடும்பத்தின் பருவ வயதுப்பெண்ணை அந்த கந்துவட்டிகும்பல் கடத்திச் சென்றுள்ளது.கடத்திச் சென்று,அவளைக் கற்பழித்துள்ளது.அப்படிக் கற்பழித்ததை,வீடியோவாக எடுத்து,இணையதளத்துக்கு விற்றுள்ளது.இதை விடக் கேவலம் நம் தமிழ்நாட்டில் வேறு என்ன இருக்க முடியும்?

அது மட்டுமல்ல; அந்த கற்பழிக்கப்பட்ட, மானமிழந்தப் பெண்ணுக்கும்,குடும்பத்திற்கும் ஆதரவாகக் களமிறங்கிய அந்தப்பகுதியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரை அந்த கந்துவட்டிக்கும்பல் வெட்டிக் கொன்றுள்ளது.... இதுவும் தமிழ் நாடு தான்.... கொடுமை இல்லே... ?

1 comment:

  1. pls give 2015வருடத்தின் மைத்ர முகூர்த்தங்கள்:

    ReplyDelete