Tuesday 14 August 2012

இரத்தின களஞ்சியம் டர்காய்ஸ்

இரத்தின களஞ்சியம்
டர்காய்ஸ்
http://www.bruce-moffitt-jewelry.com/images/c-ensemble-turquoise.jpg
டர்காய்ஸ் என்பது உப இரத்தின வகையைச் சார்ந்தது. பலர் இந்த இரத்தினத்தைப் பற்றி அறிந்திருப்பர். பழங்காலத்தி லிருந்தே இந்த இரத்தினத்தை மாலையாகவோ, ஆரமாகவோ, வளையலாகவோ, ஒட்டியாணத் தில் பதித்தோ அணியும் வழக்கம் இருந்துவந்திருக்கிறது. இது பச்சையும், நீலமும் சேர்ந்த ஒரு அழகான நிறத்தைக் கொண்டிருக் கும். இதை யார் வேண்டுமானா லும் அணியலாம். தீய பலன் களைக் கொடுப்பதற்கு இந்த இரத்தினத்திற்கே சக்தி இல்லை.
இந்த இரத்தினத்தின் உருவ அமைப்பு ஜொலிப்புத் தன்மையை இழந்திருந்தாலும் தனி அழகைப் பெற்றிருக்கும். இதை ஒருவர் அணியும் தறுவாயில் மற் றவர் கண்ணை கண்டிப்பாகத் தன்வயப்படுத்தும். இதில் ஈரா னிய டர்காய்ஸ்களுக்கு மிகுந்த வரவேற்புள்ளது. ஆனால் இந்த ஈரானிய டர்காய்ஸில் கருப்புக் கோடுகள், கருப்பு ரேகைகள், திட்டுத் திட்டான கருப்புப் படிமங்கள் அதன்மேல் படிந்திருக் கும். இவை காலங்காலமாக, ஈரான் நாட்டில் தான் கிடைக்கி றது. ஆனால் தற்போது கற்கள் குறைந்து விட்டதால் இதன் விலை, கலிபோர்னியா, அரிசோனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கிடைக்கும் டர் காய்ஸை விட அதிக விலை மதிப்புள்ளதாக இருக்கிறது.
முதன் முதலில் துருக்கியர்களே இதை அதிகம் பயன் படுத்தியதால் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே Tourquise என்று பெயரிட்டு அணிந்து பயன் பெற்றதாகப் பல வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கற்கள் நிறம் மாறும் தன்மையைக் கொண்டது. சமயத்தில் தன் நிறத்தை இழந்து வெளுத் தும் விடும். இந்தக் குறைபாட்டினால், இந்த அழகான டர்காய்ஸை அழகுக் கலைப் பொருளாக வும், ஆபரணங்களுக் காகவும் மட்டுமே பலர் பயன்படுத்து கின்றனர்.
இதில் அலுமினியம், பாஸ்பாரிக் ஆசிட், கொப்பர் ஒக்ஸைட், தண்ணீர் போன்ற பல தாதுப் பொருட்கள் உள்ள டங்கியிருக்கின்றன. இதன் கடின தன்மை 5 முதல் 6 வரை ஆகும். ஒப்படர்த்தி 2.7 ஆகும். இதன் ஒளிவிலகல் 1.61 என்பதாகும்.
இந்த இரத்தினத்தை குருவுக்காகவும், சனிக்காகவும், சூரியனுக்காகவும், கனக புஷ்பராகம், நீலம், மாணிக்கம் போன்ற மூன்று இரத்தினத்திற்கு பதிலாகவும் அவ ரவர் ஜாதகத்தை ஆராய்ந்தபின் அணி யலாம். இங்கு டர்காய்ஸ் ஒரு உபரத்தினம் மட்டுமே என்பதை நீங்கள் ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும். மாணிக்கம், கனக புஷ்பராகம், நீலம் போன்ற நவரத் தினக்கற்களுக்கு சமமான சக்தி டர்காய்ஸில் கண்டிப்பாக இராது. மேலும் 1, 3, 6, 8, 10, 12, 15, 17, 19, 21, 24, 26, 28, 30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களும், கூட்டு எண்ணாக 1,3,6,8 வருபவர்களும் இந்த இரத்தி னத்தை அணிந்து நன்மைகளை அடையலாம்.
இந்த இரத்தினத்தை அணிந்து மருத் துவரீதியாகப் பலன் பெற்றிருப்பவர் பலர். முக்கியமாக தொண்டை பிரச்சினைகள், இளமைக் குறைவு, வசீகர சக்தி மந்தமாதல், சூட்டினால் ஏற்படும் சிரமங்கள், ஈரல் கோளாறுகள், அதிக சோர்வு இவற்றினால் பிரச்சினைகளுக் குள்ளாகும் எந்த ஜாதகராக இருந்தாலும், எந்த ராசி, எந்த நட்சத்திரம், எந்த லக்னம், கோச்சாரம், திசா புத்தியாக இருந்தாலும் இதை அணியலாம்.
இந்த இரத்தினத்தை தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற எந்த உலோகத்திலும் பதித்து அணியலாம். மூன்று கேரட்டுக்கு மேல் இருந்தால் சிறப்பு. மோதிரத்திற்குப் பின்னால் திறப்பு வைத்தே அணிய வேண்டும். இந்த இரத்தினத்திற்கு மறுபக்கம் பாறை வடிவில் காணப்படும்.
இந்த இரத்தினத்தை உரிய முறையில் பதித்து அணிவதற்குத் தயாராக இருக்கும் நிலையில் சுத்தப்படுத்திய பின்னரே பலன் கிடைக்கும். இல்லையேல் இது அழகுக்கு மட்டும் பயன் படுத்தும் கல் போன்றே விளங்கும்.
பூமியில் கடவுளால், இயற்கையினால் உருவாக் கப்பட்ட பொருட்கள் பல. அதில் ஒன்று தான் இரத் தினங்கள்.
இரத்தினங்களின் சக்தியை அக்காலத்திலேயே நம் முன்னோர்கள் உணர்ந்து நமக்காகத் தந்துள் ளனர். அவற்றை முறைப்படி தெரிந்து, அறிந்து உபயோகிக்கும்போது பலன் நிச்சயம் என்பதை அணிந்தவர்கள் உணர்ந்திருப்பதை போல நீங்க ளும் அறிந்து பலன் பெறுவீர்களாக.

No comments:

Post a Comment