Tuesday 14 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 300


காணப்பா குருபதியின் நிலைமைபாரு
கனமுள்ள இராமனின்ற நிலையைப்பாரு
வீண்ப்பா லெக்கினேசன் நிலையைப்பாரு
விதமான ஜென்மனுட திசையைப்பார்த்து
ஊணப்பா உன் மனத்தை திடப்படுத்தி
உத்தமனே ஊழ்வினையை யெடுத்துச் செப்பு
ஆளப்பா போகருட கடாட்சத்தாலே
அப்பனே புலிப்பாணி முன்னூறுமுற்றே.


அன்பனே! இலக்கினத்திற்குரியவனும், குருவும் நின்ற நிலையை நீ காண்க! வெகு நன்மைதரும் புதபகவான் நின்ற நிலையையும் நீ கூற்மையுடன் கவனிப்பதோடு அச்சாதகனின் திசை, புத்தி ஆகியனவற்றை உறுதியாக எண்ணி, உன்மனத்தையும் நன்கு திடப்படுத்திக் கொண்டு அச்சாதகனின் ஊழ்வினைக்கேற்ற பலனைக் கூறுக. அவ்வாறு நீ கூறினாயேயானால் போகர் கருணையால் புலிப்பாணி கூறியது முற்றுப்பெறும்.

No comments:

Post a Comment