Tuesday 14 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 298


மகரமரிகும்பம்யாழ் மாதலவன்வில் மீனம்
பகர்துலைதேள் மாடாடு பண்பாய்- இ·துலகில்
லேசாராதாமேவில் வேசியமாம் நன்மை
தாசாரா மேவிலதந்தான்


கும்பம், மகரம், சிம்மம், மிதுனம், ஆகிய நான்கு லெக்கினங்களுக்கு சாத்மீகவேளை வந்தால் அமிர்த யோகமும், தாமதவேளை வந்தால் மரண யோகமும் இது இரண்டுமல்லாத மற்ற ராக்ஷச வேளை வந்தால் சித்த யோகமுமாம். அப்படியே, கன்னி-கடகம்-தனுசு-மீனம் ஆகிய நான்கு லெக்கினங்களுக்கும் ராக்ஷசவேளை வந்தால் அமிர்த யோகமும் சாத்மீக வேளையானால் மரணயோகமும் இதுகளிரண்டுமில்லாத மற்ற தாமத வேளையானால் சித்த யோகமும் அப்படியே-துலாம்-விருச்சிகம்-மேஷம்-ரிஷபம் ஆகிய நான்கு லெக்கினங்களுக்கும் தாமதவேளையானால் அமிர்தயோகமும், ராக்ஷசவேளையானால் மரண யோகமும், இதுகளிரண்டுமல்லாத மற்ற சாத்மீக வேளையானால் சித்தயோகமும், எவ்விதமான சுபநிகழ்ச்சிகளுக்கும் அநேகர் லெக்கினங்களூக்குத் தக்க வேளைகளைப் பொருந்தப் பார்க்காத தோஷத்தால் விக்கினங்கள் நேரிடுவதை கவனிக்க வேண்டும்.

No comments:

Post a Comment