Tuesday 14 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 295


வெய்யோனிருபக்கம் பாரு--மாதே
வேந்தனுக் கொப்பான கோள்களுமேற
பையவேலவனுக்குப்பண்டு--பொருள்
யோகமும் போகமும் பகர்ந்து சொல்தோழி
சங்கர சங்கர சம்போ சிவ
சங்கர சங்கர சங்கர சம்போ


இனி விரயஸ்தானம் என விளம்பப்படும் 12-க்குடையவன் திசையைப் பற்றிக் கூறுகிறேன். கேட்பாயாக! இப்பன்னிரண்டுக்குடையோன் நின்ற இராசிக்கு முன்னும் பின்னும் குருவுக்கு ஒப்பான சுப கிரகங்கள் தேறி நிற்க இச்செல்வனுக்கு மூதாதையர் தம் பெரும் பொருள் வந்து வாய்க்கும் யோகமும் அதனால் சுகபோகம் விளைதலும் உண்டாகும் என நன்கு ஆராய்ந்துணர்ந்து பலன்களை நிகழ்த்துவாயாக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment