Tuesday 14 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 289


ஆறவன் திசையை நீபாரு--மாதே
ஆறவனஞ்சேழி லாபத்திலேறி
சீராக கேந்திரம்புக்க--சிறை
காவலும் யோகமும் சிறந்து சொல்தோழி
சங்கர சங்கர சம்போ சிவ
சங்கர சங்கர சங்கர சம்போ


இனி 6-ஆம் இடத்திற்குடையவனது திசையைப் பற்றிக் கூறுகிறேன். இதனையும் உன்னிப்பாய்க் கேட்பாயாக! இவ்வாறுக்குடையவன் 5,7,11 மற்றும் 1,4,10 ஆகிய கேந்திரங்களிலும் இருப்பின், சிறைக் காவல் ஏற்படும். எனினும் சிறந்த யோகமும் அவனுக்கு உண்டென்று தெளிவாகச் சொல்வாயாக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment