Tuesday 14 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 288


அஞ்சவன் திசையை நீகேளு--மாதே
அஞ்சேழிலீரைந்தி லாபமுமேற
தொந்தமாயின்னுக்கு செப்பு-சுகம்
தென் கீழ்திசைதனில் யோகம் சொல்தோழி
சங்கர சங்கர சம்போ சிவ
சங்கர சங்கர சங்கர சம்போ


இனி 5-க்குடையவன் திசையைக் கூறுவேன் கேட்பாயாக! இவ்வைந்திற்குடையவன்., 5,7,10,11 ஆகிய இடங்களில் தேறி அமர்வானாகில் இச்சாதகனுக்கு தென்கிழக்குத் திசையில் யோகம் ஏற்படுதலும் சுகபோகம் அடைதலும் உண்டென்று சொல்வாயாக எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

No comments:

Post a Comment