Tuesday 14 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 281


ஒண்ணவனுச் சமுமாகி மாதே
ஒரைந்தில் முடவனும் வெள்ளியைநோக்க
திண்ணமாயிவனுக்கு புத்திரன் - தீர்க்கம்
திடமாகவியஞ்சொல்லு சொல்லு சொன்னாண்டி தோலி !
சங்கர சங்கர சம்போ சிவ
சங்கர சங்கர சங்கர சம்போ


தோழிப்பெண்ணே! சிவன் என்றும் சங்கரிக்கும் சங்கரன் என்றும் கங்கையெனும் புனிதத்தைத் தலைக்கணிந்தவனும் ஆன சிவபெருமானின் பேரருளால் போகமாமுனிவர் ஆய்ந்துணர்ந்த (திசாபாக உடற்கூற்று வண்ணம்) தைச்சொல்கிறேன். கேட்பாயாக! இலக்கினாதிபன் உச்சமாகி 5-ஆம் இடத்தில் சனிநின்று சுக்கிரனைப் பார்க்க இச்சாதகனுக்குத் திண்ணமாய் புத்திர பாக்கியம் உண்டு. அப்புத்திரனும் தீர்க்க ஆயுளுடன் வாழ்வன் ஆயினும் 12-ஆம் இடத்தில் அமர்ந்த கிரகங்களையும் அவ்விடத்தைப் பார்த்த கிரக பார்வையையும் உன்னிப்பாய் அறிந்து பின் பலன்களைக் கூறுவாயாக.

No comments:

Post a Comment