Monday 13 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 262 - கேது மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்


பாரப்பா கேது திசை சூரியபுத்தி
பாங்கான நாளதுவும் நூத்திஇருபத்தி ஆறு
பாரப்பா அதன் பலனைச் சொல்லக்கேளு
ஆகாதசத்துருவால் அக்கினியும்பேயும்
சேரப்பா சேர்ந்துமே கூடிக்கொல்லும்
சேர்ந்துநின்ற தந்தைகுரு மரணமாகும்
வீரப்பா வீண்சிலவு மிகவேயாகும்
வீடு விட்டு காஷாயம் பூணுவானே


கேது மகாதிசையில் சூரிய பகவானின் ஆதிக்க காலம் 4 மாதம் 6 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! மனம் ஒவ்வாத பகைவரால் துன்பம் நேரும். அக்கினி பயமும் பேய், பிசாசுகளினால் மிகுந்த பயமும் சேர்ந்து இச்சாதகனைக் கொல்லும். இவர்க்கு உறுதுணையாக நின்ற தந்தைக்கும், குருநாதர்க்கும் மரணம் ஏற்படும். வீணான தண்டச் செலவுகளால் இச்சாதகன் துறவு பூணுவான் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் கேது மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment