Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 254 - புதன் மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்


கேளப்பா புதன் திசையில் சூரியபுத்தி
கெணிதமுள்ள நாளறும் மாதம்பத்து
ஆளப்பா அதன் பலனை அரையக்கேளு
ஆதிகுரு தலஞ்சிவ பதங்களுள்ளாம்
காணப்பா காவியது வேஷ்டியுண்டு
காசினியில் பரதேசி ஆகிப்போவான்
வாளப்பா மடபதியிலுருந்து கொண்டு
மனையாட்டி தன்னுடனே வாழ்ந்திருப்பான் தானே.


புதமகா திசையில் சூரியனின் ஆதிக்க காலம் 10 மாதம் 6 நாள்கள். இக்காலத்தில் நிகழ்த்தும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! இச்சாதகன் இக்கால கட்டத்தில் சிவார்ச்சனை செய்வதோடு ஹோம சாந்தி முதலியன நிகழ்த்தி நிறையருள் பெறுவான். இவன் பூமியில் பரதேசியாக ஆகித்திரிவான். பின்னர் மடாதிபதியாகி இல்லறத்தினைத தொடர்வான் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் புதன் மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment