Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 252 - புதன் மகாதிசை, கேது புத்திப் பலன்கள்


வாழலாம் புதன் திசையில் கேதுபுத்தி
வகையில்லா மாதமது பதினொன்றாகும்
குள்ளலாம் நாளதுவும் யிருபத்தியேழு
கொடுமையுள்ள அதன்பலனைக் கூறக்கேளு
மாளலாம் பகைவரும் உத்தாநாசம்
மணமில்லா வியாதியதும் மடிந்து கொல்லும்
தேடலாம் திரவியங்கள் சேதமாகும்
தினந்தோறும் சத்துருவும் நீதான்பாரே.


புதமகாதிசையில் கேது பகவானின் ஆதிக்க காலம் 11 மாதம் 27 நாள்களாகும் . இக்கால கட்டத்தில் நிகவும் பலன்களாவன: மாண்டு போகலாம் என்ற எண்ணத்தை அளிக்கும். வலியபகை வந்து சேர்தலோடு செய்தொழில் நாசம் அடையும். விரும்பத்தகாத வியாதிகளும் வந்தடையும்., அதனால் மரணமும் நேரும். நிறைந்த செல்வங்கள் தேடிப் பெற்றாலும் அவை அழிவுறும். ஒவ்வொரு நாளூம் புதுப்புதுப் பகைவர் தோன்றுவர். இதனை நீ அறிவாயாக என்று போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.

இப்பாடலில் புதன் மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment