கேளப்பா சனிதிசையில் மார்க்கங்கேளு |
சனிமகாதிசை வருடம் 19-காக்கை வாகனனான அச்சனிபகவானின் பொசிப்புக்காலம் இதில் 3 வருடம் 3 நாள்களாகும். இக்காலகட்டத்தில் துன்பம் தரத்தக்க பலன்களே விளையும். அவையாவன: மனம் விரும்பிய பாவையரும் பாலகரும் மடிவார்கள். வெகுவான அலைச்சல் திரிச்சல் உண்டாகும். வெகுதன விரயம் ஏற்படும் என்று போகர் பேரருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சனி மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
No comments:
Post a Comment