Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 241 - வியாழன் மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்


ஆகுமே வியாழ திசை ராகுபுத்தி
அருளில்லா மாதமது யிருபத்தெட்டு
போகுமே நாளதுவு மூவெட்டாகும்
பொல்லாத அதன்பலனைப் புகலக்கேளு
வாகுமே வியாதியது பீடிப்பாகும்
மனைவியரும் புத்திரரும் மாண்டுபோகும்
யேகுமே சத்துருவும் இடஞ்சலுண்டாம்
இதங்கேடு பண்ணிவைக்கும் யிம்மையுடன்கேளே


வியாழமகாதிசையில் இராகு பகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 4 மாதம் 24 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: தேக நலத்தைக் கெடுக்கும். வியாதிகள் வந்துசேரும். மனைவி, புத்திரர் ஆகியோர் மரணமடைதலும் நேரும். பகைவரால் வெகுபயம் உண்டாகும். அவரால் இடைஞ்சல்கள் ஏற்படும். காரியக்கேடு ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் வியாழன் மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment