Saturday 11 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 225 - இராகு மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்


கூடியே ராகுதிசை வியாழபுத்தி
குணமுள்ள மாதமது யிருபத்தெட்டும்
நாடியே நாளதுவும் மூவெட்டாகும்
நலமுள்ள ராசரால் நன்மையுடன் வாழ்வன்
தேடியே தெரிவையரும் சோபனமேயாகும்
தெகுட்டாத புத்திரனும் தென்புடனேவாழ்வான்
பாடியே பாக்கியமும் பவுசிகளுண்டாம்
பலன் தரும் பூமிமுதல் யோகந்தானே


இவ்விராகு திசையில் வியாழ புத்திற்குரிய காலம் 2 வருடம் 4 மாதம் 24 நாள்களாகும். இக்காலத்தில் இச்சாதகனுக்கு அரசரால் நன்மையுண்டாகும். பெண்களால் சுபசோபனங்கள் ஏற்படுதலும் புத்திரோற்பத்தியும் ஏற்படும். அதனால் மனத்தில் தெம்பும் மகிழ்ச்சியும் மிகுந்து காணும். பலவிதமான பாக்கியங்கள் ஏற்படுவதோடு சமுதாயத்தில் அந்தஸ்து மிகுதலும், வெகுதனம் வாய்த்தலும் பூமி லாபமும் உண்டாகும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் இராகு மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment