Saturday 11 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 218 - செவ்வாய் மகாதிசை, சனி புத்திப் பலன்கள்


வெற்றியில்லா சேய்திசை சனியன்புத்தி
வீறான நாளதுவும் மாதம்பதின்மூன்று
சத்தியில்லா நாளதுவும் ஒன்பதாகும்
சுகமில்லை அதன்பலனை சூட்டக்கேளு
புத்தியில்லா சத்துவும் ரோக பயமுண்டாம்
பூவையரும் புத்திரரும் புனிதமுடன் மடிவாம்
கத்தியில்லா தர்க்கங்கள் மெத்த உண்டுபாரு
கனதையுள்ள சூனியமும் கனாவுடனேகாணும்


வெற்றியே அளிக்கவல்ல செவ்வாய் திசையில் அச்செவ்வாயின் பகைவன் எனச் சொல்லத்தகும் சனிபகவானின் பொசிப்புக் காலம் 1வருடம் 1 மாதம் 9 நாள்களாகும். இவை சுகமில்லா நாள்களே. இக்கால கட்டத்தில் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! அறிவற்ற பேதைகளான சத்துருக்களினால் பயம் ஏற்படும். நோயின் பயம் உண்டாகும். பெண்டிரும், புத்திரர்களும் மரணமடைய நேரிடும்; ஆதாரமற்ற தர்க்கங்கள் உண்டாகும்; அவையும் வெகுவானதாக இருக்கும். சூனியங்களால் தொல்லையும் கனாக்களினால் பயமும் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment