Friday 10 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 209 - சந்திர மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்


தேறவே சந்திரதிசை வியாழபுத்தி
தீங்கில்லா மாதமது பதினாறாகும்
கூறவே யிருந்தபலன் தன்னைக்கேளு
குணமுடைய மாதர்களும் சோபனமேயுண்டாம்
சேரவே செட்டுடனே லாபமுண்டாம்
சென்னல் முதல் விளைவாகுஞ்செல்வஞ்சேரும்
வீரவே வியாதியது நிவர்த்தியாகும்
வீறான மணியமுடன் விளையகலும்பாரே.


இப்படிப்பட்ட பெருமைக்குரிய சந்திர திசையில் வியாழபுத்தியின் பொசிப்புக் காலம் 16 மாதங்களாகும். அந்தக் காலகட்டத்தில் ஏற்படும் பலன்களை நன்கு அறிந்து கேட்பாயாக! நல்ல மணமகளுடன் சுபசோபனம் உண்டாகும். அதனால் பெருத்த லாபமும் உண்டாகும். சென்னல் முதலிய விளைவயலில் விளைவாகும். மிகுந்த செல்வம் சேரும். எத்தகைய வியாதியாய் இருந்தபோதும் நிவர்த்தியாகும். எதற்கும் தலைமை தாங்கும் பண்பு ஏற்படுவதோடு பூர்வ ஜென்ம வினையும் அகலும் என்பதை நீ நன்கு உணர்வாயாக என்று போகரது கருணையால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சந்திர மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment