Monday 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 124


போச்சப்பா யின்னமொரு பேச்சுகேளு
பொன்னுவெள்ளி சனி செவ்வாய் புந்தி ஐவர்
யேச்சப்பா யெத்தலத்தில் கூடிட்டாலும்
என்மகனேயென்ன சொல்வேன் இராஜகள்ளன்
ஆச்சப்பா அரண்மனைக்குள் புகுந்தானானால்
அங்கிருக்குந் தலையாரி உறங்கிப் போவான்
வீச்சப்பா போகருட கடாட்சத்தாலே
விதமான புலிப்பாணி விளம்பினேனே


இன்னொரு கருத்தையும் நான் கூறுகிறேன். அதனையும் நீ கேட்பாயாக! வியாழனும், சுக்கிரனும், சனியும், செவ்வாயும், புதனும் ஆகிய இவர்கள் ஐவரும் எந்த இடத்தில் கூடினாலும் அச்சென்மனை நான் என்னவென்று சொல்வேன்? இவனே இராஜகள்ளன். இவன் அரண்மனைக்குத் திருடச் சென்றானேயானால் அங்குள்ள காவலன் உறங்கிப் போவான். இதனையும், போகரின் அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.

No comments:

Post a Comment