Tuesday 21 August 2012

பெண்களின் கைகள் சொல்லும் ஜோதிடம்



பெண்களின் கைகளது அமைப்பை வைத்து அவர்களது குணாதிசயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

* கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். லாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

* கைகள் வறட்சியாகவும், நரம்புகள் வெளியே தெரியும்படியும் அமைந்திருந்தால், அவளது குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகமிருக்கும். கணவனும், பிள்ளைகளுமே கூட விரோதியாவார்கள்.

* மணிக்கட்டுகள் தெரியாமல் இருந்தால், அவர்களுக்கு ஆபரண யோகமும், தெய்வ அனுகூலமும் உண்டாகும்.

* உள்ளங்கைகள் சிறிது பள்ளமாக இருக்கும் பெண்கள் உத்தமிகள். உண்மை யைப் பேசும் குணமுடையவர்கள். ஒழுக்கமானவர்கள்.

* உள்ளங்கைகள் அதிக பள்ளமாகவும், முக்கியமான ரேகைகள் மட்டுமே நன்றாகத் தெளிவாகப் பிரகாசமாக இருந்தால் எந்தக்காலத்திலும் சரீர ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

* பெண்களது கைகள் முழங்கால் அளவுக்கு நீண்டு தொங்கும்படி அமைந்திருந்தால், அவர்கள் சகல சவுபாக்கியங்களுடன் இருப்பார்கள். வாழ்க்கையின் சங்கடங்கள் எதையும் சிரித்த முகத்துடன் சசித்துக் கொள்வார்கள். பாசமானவர்கள். கணவனுக் காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பார்கள்.

* கைகளில் அடர்த்தியான ரோமங்கள் இருந்தால், அவர்கள் அளவுக்கு மீறிய காம இச்சையுடன் இருப்பார்கள். தம்மையும் மீறி ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவார்கள். குடும்ப வாழ்க்கையில் இவர்களால் நீடித்திருக்க முடியாது. கணவருக்கு உண்மையாக நடந்துகொள்ள மாட்டார்கள்.

* பெண்களின் கை விரல்கள் மென்மையாகவும், ஒழுங்காகவும், அழகாகவும் இருந்தால் சகல சவுபாக்கியங்களும் அமைந்திருக்கும். இத்தகைய பெண்களுக்கு புண்ணிய காரிங்களில் ஈடுபாடு அதிகமிருக்கும். கணவனை மதிப்பவர்கள். எல்லோரும் பாராட்டும் வகையில் நடந்துகொள்வார்கள். இனிமையாகப் பேச, பழகக்கூடிய வர்கள்.

* நீண்ட கை விரல்களை உடைய பெண்கள் கலையார்வமுள்ளவர்கள். இசை ஞானம் உள்ளவர்களாகவோ, இசைக் கருவிகளை வாசிப்பதில் பெரிதும் வல்லவர்களாகவோ இருப்பார்கள். சிலர் நாட்டியத்திலும், சிலர் நடிப்பிலும் சிறந்து விளங்குவார்கள்.

* கை விரல்கள் பருமனாகவும், முரடாகவும் அமையப் பெற்ற பெண்கள், உழைத்து சம்பாதித்து வாழ்பவர்களாக இருப்பார்கள். பொறாமைக் குணமுடையவர்களாகவும், கலகம் செய்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்குப் புத்திர பாக்கியம் அமைவது அரிது.

* கை விரல்கள் நெருக்கமாக சேர்ந்திருந்தால், கஞ்சத்தனம் மிக்கவர்களாகவும், பணம் சேர்ப்பதிலேயே எப்போதும் குறியாகவும் இருப்பார்கள்.

* விரல்கள் அதிகப் பருமனாக இருந்தால் கணவனுக்குக் கண்டம் உண்டாகும்.
* கைவிரல் நகங்கள் சொத்தையாகவும், கறுப்பாகவும் இருந்தால் ஆயுட்காலம் முழுவதும் கஷடமும், வறுமையும், பலரின் பழிப்பும் உண்டாகும்.

* விரல் நகங்கள் சிவந்து, பளபளப்பாக, அழகாகக் காணப்பட்டால் அப்பெண்கள் ஆரோக்கியமானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.

* பெண்களது கைகள் சமமாக இருந்தால், அவர்களுக்கு எல்லா சவுபாக்கியங்களும் கிட்டும். குடும்பத்தை நன்றாக நிர்வாகிப்பார்கள். பெரியவர்களிடம் மரியாதை மிக்கவர்கள்.

No comments:

Post a Comment