Monday 6 August 2012

அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுகிறதா? ஜோதிட பரிகாரம் என்ன?



கருச்சிதைவு ஏற்படும் ஜாதகங்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால், கரு உருவாகும் காலத்தை அவர்களின் ஜாதகத்தை வைத்து கணிக்க வேண்டும்.

குறிப்பாக 5க்கு உரிய கிரகம் தம்பதிகளுக்கு வலுவடையும் போது கருவுறுவது சிக்கலைக் குறைக்கும். தசாபுக்தியும் முக்கியமானதாகும்.

பரிகாரம்

அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் திருக்கருகாவூர், திருசெந்தூர் போன்ற கோயில்களுக்கு செல்லலாம். இதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இது பொதுவான பரிகாரம்.
தனிப்பட்ட முறையில் அவரவர் ஜாதகத்தை கணித்து அதற்கேற்ற வழிபாட்டு முறை, பரிகாரங்களை மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும். உதாரணமாக ஒரு சிலருக்கு சித்தர் பீட வழிபாடு சிறப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment