Tuesday 14 August 2012

இரத்தின களஞ்சியம் ஸ்படிகம்

இரத்தின களஞ்சியம்
ஸ்படிகம்
http://www.minerough.com/Images/Products/Quartz-cut/Quartz-mix.jpg
இந்த மாதம் ஸ்படிகங்கள் பற்றிப் பார்க்கலாம். மிக அற்புதமான கல் ஸ்படிகம். இதை Quartz என்பர். இதன் நிறங்கள் பல என்றாலும் அதிகமாகக் கிடைக்கும் நிறங்கள் வெள்ளை, மென்சிவப்பு, ரோஜா போன்றவை. ஸ்படிகத்தைத் தொடும்போது ஜில்லென்று உணரலாம். விலை மிகவும் குறைவுதான். சிறிய உருவத்தில் இருக்கும் ஸ்படிகங்களை பாறைகளாகப் பார்க்கும் போது கற்கண்டுகளை நெருக்கமாக ஒட்டியது போல் காணப்படும்.
ஸ்படிகப் பாறைகளை அனைவரினதும் கண் பார்வை படுமாறு வைக்கும் போது அந்த இடத்தின் தன்மை மிகவும் சாந்தமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். ஸ்படிகத்தை எந்த வடிவில் வைத்திருந்தாலும் வாரம் இரு முறை யாவது தண்ணீருக்குள் அந்த ஸ்படிகத்தைக் குறைந்தது 4 மணி நேரம் ஊறவிடவேண்டும், பின்பு அதை அதன் இடத்திலேயே வைக்கலாம். அதை அபிஷேக முறையிலும் செய்யலாம். ஸ்படிகப் பாறைகள் வாங் கும்போது விஸ்திரண வடிவில் இருக்க வேண்டும். குறுகிய துறுப்பு உள்ளதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் மேஜையில் வைத்தால் கவனம் ஒருமுகப்படும்.

ஸ்படிகப் பென்சிலை யார் வேண்டுமானாலும் டொலராக உபயோகிக்கலாம். பிரமிட் வடிவ ஸ்படிகம் இரட்டிப்பு சக்தி பெற்றிருக்கும். ஸ்படிகப் பந்து அல்லது முட்டை வடிவில் உள்ள ஸ்படிகத்தை வீடு மற் றும் தொழில் செய்யும் இடங்களில், வெயில் படும் வாயிலில் மாட்டினால் சண்டை, சச்சரவு உள்ள வீடு கூட அமைதிபெறும். ஸ்படிகத்தை மாட்டும்போது அசையக்கூடியவாறு (உதாரணம்: நூலில்) மாட்ட வேண்டும்.

ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதே சங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமா னாலும் அணியலாம்.

ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்ப டிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூ டாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும்தான். காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும். காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாக இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் உணரலாம்.

இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். அந்த தரு ணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்க ளுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல் லது தங்கத்துடன் இணைத்தோ அணியலாம். வீட் டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம். இவ்வளவு அற்புத மான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம். ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்யும் போது அதன் சக்தி அப்படியே இருக்கும்.

ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மெகரு. இந்த மெகரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும். மகா மெகருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டிலோ வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அதற்கும் அபிஷேகம் மிகவும் முக்கியம். ஸ்படி கத்தை யானை வடிவில் வைக்கும்போது லஷ்மி கடாட்சம் வரும். இவ்வளவு அற்புதங்கள் அடங் கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவீர்களாக.

No comments:

Post a Comment