Sunday 5 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 99


சூடப்பா யின்னமொன்று செப்புக்கேளு
சுகமுள்ள நாலோனைக் கருமன் கூடில்
கூடப்பா கோவில் திருப்பணிகள் செய்வன்
கொற்றவனே வாகனமும் செம்பொன் கிட்டும்
வீடப்பா வெள்ளிக்கு அம்மன் துர்க்கா
விதமான புந்திக்கு அய்யன்மாவோன்
பாடப்பா பவும னுக்கு சுப்பிரமணியம்
பரமென்ற சிவனுக்கு பொன்னன் கூறே


இன்னமொரு கருத்தையும் கூறுகிறேன் கவனமாகக் கேட்பாயாக! சுகஸ்தானாதிபதியாகிய நான்காம் இடத்தோனுடன் பத்தாமிடத்ததிபதியான கருமன் கூட அச்சென்மன் கோயில் திருப்பணிகள் புரிபவனாவான். அவனுக்குச் சிறந்த வாகனங்களும் செம்பொன்னும் கிடைக்கும். இலக்கினாதிபதி சுக்கிரனாகில் துர்க்கையம்மனுக்கும் புதனாகில் ஐயனார். திருமால் ஆகியோருக்கும் செவ்வாயாகில் சுப்பிரமணியருக்கும் குருவாகில் பரமசிவனுக்கும் கோவில் திருப்பணி செய்வான் என்று கூறுக.

No comments:

Post a Comment