தானேதா னின்ன மொன்று செப்பக்கேளு |
நானே உனக்கு இன்னுமொன்றையும் கூறுகிறேன். அதனை கவனத்துடன் கேட்பாயாக! இரண்டுக்குடையவன் இரண்டாம் இடத்தில் அமர, அவன் அரச செல்வம் பெற்ற போதிலும் பூமியில் பணத்தை விரயம் செய்யாத கஞ்சனே ஆவான். தன்னுடைய பெண்டு பிள்ளைகளுக்குக்கூட பணம் ஈயான் என்பதோடு, உணவும் ஈயாது உலோபியாய் இருப்பான் என்றும் அவன் வீணான ஜன்மனே என்றும் போகரது அருளினால் புலிப்பாணி கூறினேன்.
No comments:
Post a Comment