Sunday 5 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 92


கேளப்பா மலை தனத்தில் சப்தகோள்கள்
கெடி மெத்தமுடியரசு சீமானென்றேன்
ஆளப்பா சேனைபரி வேடர் கூட்டம்
அணியணியா யிருக்குமடா அலங்கஞ்சுத்தி
நாளப்பா நவமணியும் பொருந்திநிற்கும்
நலமான துரகங்கள் ரதங்களுள்ளோன்
சூளப்பா போகருட கடாட்சத்தாலே
சுகமாகப் புலிப்பாணி பகர்ந்தேன்பாரே.


இன்னொரு கருத்தினையும் கூறுகிறேன். கேட்பாயாக! கேந்திர ஸ்தானத்திலேனும், இரண்டாமிடமான தனஸ்தானத்திலேனும் ஏழு கிரகங்கள் பொருந்தி நிற்பின் அச்சாதகன் அரச செல்வம் பெற்ற சீமானேயாவான். அவனுக்கு சேனைகளும், பரிக் கூட்டமும், வேடர் கூட்டமும் அணியாகத் திரண்டிருக்கும் என்பதோடு வைரம் முதலான நவமணிகளும் பொருந்தி நிற்பதுடன், நல்ல ரகக் குதிரைகளும் ரதங்களும் உடையவன் என்று போகமா முனிவரின் அருளாணைப்படி புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment