அரைந்திட்டேன் நாலுபேர் கூடிநிற்க |
வேறொன்றையும் கூறுகிறேன் கேட்பாயாக! நாலு கிரகங்கள் கூடி நிற்க அவற்றுடன் மற்ற கிரகங்கள் உறவாய் நிற்க, அச்சாதகன் இந்நிலவுலகத்தை ஆளும் மன்னவன் என்றும் அவனது சேனை பலத்திற்கு அளவில்லை என்பதும், சிறந்த கப்பம் செலுத்தும் சிற்றரசர்கள் அவனுக்கு வெகுபேர் உண்டென்றும் என்றென்றும் நற்பேறும் புகழும் கொண்டு வாழ்வான் என்றும் இவனுக்கு எதிரிகள் இருப்பாரானால் அழிந்தொழிவர் என்றும்இவன் பகைவருக்கு எமன் போன்றவன் என்றும் போகமா முனிவரின் அருளாணையால் புலிப்பாணி புகன்றிட்டேன்.
No comments:
Post a Comment