Saturday 4 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 52


சூடப்பா சரராசி செனித்தபேர்க்கு
சுகமில்லை லாபாதி பதியினாலே
ஆடப்பா அகம்பொருளும் நிலமும்சேதம்
அப்பனே அரசரிட தோஷமுண்டாம்
தேடப்பா திரவியமு மளித்தாரானால்
திடமான அரிட்டமடா தேடமாட்டான்
வீடப்பாகோணத்தில் லிருக்கநன்று
விளம்பினேன் புலிப்பாணி வினையைப்பாரே


சரராசியில் பிறந்த ஜாதகனுக்கு, பதினொன்றாம் இடத்திற்கதிபதியான லாபாதிபதியாலே சுகமில்லை. ஏனெனில் அவனது பொசிப்பு காலத்தில் மனையும், பொருளும், நிலமும் சேதமாவதுடன் மன்னராலும் தோடம் ஏற்படும். அவ்வாறன்றி நிறைந்த செல்வத்தை ஒருவேளை அளித்தாலும் கூட நோயுபாதை போன்ற அரிட்டங்களையும் தருவார். ஆனால் அவனால் நிறை தனம் தேட இயலாது. ஆயினும் திரிகோண ஸ்தானத்தில் (1,5,9) இருந்தால் நன்மையான பலன்களையே தருவேன் என்று புலிப்பாணி போகரருளாணையால் கூறினேன்.

No comments:

Post a Comment