Friday 3 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 39 - பதினொன்றாம் இடத்தில் மாந்தி


தானென் பதினொன்றில் குளிகன் நிற்கத்
தரணிதனில் பேர் விளங்குந் தனமுமுள்ளோன்
யேனென்ற அயன்விதியும் அறிந்துசெப்பு
யென்மகனே வசியனடா ஜாலக்காரன்
வீணென்ற விரயனடா ரசவாதத்தால்
விளம்புகிறேன் வீடுமனை கொதுவை வைப்பான்
கோனென்ற போகருட கடாக்ஷத்தாலே
கொற்றவனே வியத்தில் நின்ற பலனைக்கூறே


இலக்கினத்திற்கு பதினொன்றாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகன் பூமியில் நல்ல புகழ் உடையவனேயாவான். சிறந்த தனலாபம் உடையவனே. இவனது ஆயுள் பலத்தை அறிந்து கிரக நிலைமை தெரிந்து நீ சொல்லுக. இவன் வசியன் [தேவதை வசியன்] ஜாலக்காரன். இனி பன்னிரண்டாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்தவன் வீண்விரயம் செய்பவன். ரசவாதம் தேர்ந்தவன். குடும்ப நாசம் செய்பவன். ன் குருவான போகருடைய அருளாணையாலே நான் கூறுவதை ஆராய்ந்தறிந்து நன்கு உணர்த்துக.

இப்பாடலில் பதினொன்றாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment